India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவை விஜய் விமர்சித்தாலும், கொள்கையில் TVK- DMK இடையே வித்தியாசம் கிடையாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் திமுக, தவெக கொள்கை. திமுக மத நம்பிக்கை, பக்திக்கு எதிராக நிற்காது. தவெகவின் நிலைப்பாடும் அதுதான். DMK-மாநில சுயாட்சி, TVK-மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்போம். மதச்சார்பின்மை, சமூகநீதி கொள்கை, ஆளுநர் பதவி வேண்டாம், இருமொழிக் கொள்கை, நீட் எதிர்ப்பு போன்றவை இரு கட்சிகளின் கொள்கை.
பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல “ஆட்சியதிகாரத்தில் பங்கு” என்கிற அரசியல் உத்தியை விஜய் வெளிப்படுத்தியுள்ளதாக திருமா கடுமையாக சாடியுள்ளார். ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
அல்பேனியாவில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 18 வயதான சிராக் சிக்கரா ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கிர்கிஸ்தான் வீரர் அப்டிமாலிக்கை இறுதி போட்டியில் சந்தித்த சிராக் 4-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிக் கொண்டுள்ளார். இந்த சாம்பியன்ஷிப்பை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் சிராக்.
ஃபாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்வது ஏன்? திருமா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் ஃபாசிச எதிர்ப்பு என்றாலே, பாஜக எதிர்ப்புதான் என குறிப்பிட்டுள்ள அவர், விஜய் அதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றே புரியவில்லை என்றார். பிளவு வாதத்தை எதிர்ப்போம் என அவர் கூறுவதை பாஜக எதிர்ப்பு என புரிந்து கொண்டாலும், ஃபாசிச எதிர்ப்பாளர்களை விஜய் கிண்டல் செய்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோவை, விருதுநகர், மதுரை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனவே, தீபாவளிக்கு வெடிகள், துணிகள் உள்ளிட்ட பொருட்களை பர்சேஸ் செய்ய வெளியே சென்ற மக்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.
கூகுளில் சத்தமே இல்லாமல் விஜய்யின் TVK கட்சி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடியவைகளில் அக்கட்சி 5ஆவது இடத்தை பெற்றுள்ளது. மாநாடு இடம், விஜய் பேச்சு, மாநாட்டுக்கான பேருந்து மற்றும் ரயில் வசதி, எவ்வளவு பேர் வருவார்கள் என மாநாடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை பொதுமக்கள் தேடியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் விமர்சனங்களால் எங்களது கவனம் சிதறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திமுகவின் தேவையை 75 ஆண்டுகளாக மக்கள் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி அடைந்து என்றார். முன்னதாக விக்கிரவாண்டி மாநாட்டில், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றி வருவதாக விஜய் விமர்சித்திருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் காற்று மாசு அதிகரிக்க பாகிஸ்தானே காரணம் என, அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் குப்தா கூறியுள்ளார். நொய்டா, காசியாபாத், டெல்லி போன்ற இடங்களில் மாசு ஏற்பட பாகிஸ்தானையே குற்றம் சொல்ல வேண்டும் எனப் பேசியுள்ள அவர், அந்நாட்டு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலேயே காற்றில் மாசு கலக்கிறது என்றார். உ.பி., PAK இடையேயான தொலைவு 800 KM என்பது குறிப்பிடத்தக்கது.
2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே திமுகவின் இலக்கு என்றும், அதை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் போது, சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 6 கழகத் தோழர்கள் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.