India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்ததால், தெலுங்கு திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய பிரகாஷ்ராஜ், சமூகத்தில் தவறு நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றார். அதனால், தெலுங்கில் தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காது என்ற நிலை வந்தாலும் தனக்கு பிரச்னை இல்லை எனக் கூறியுள்ளார்.
IND-NZ மகளிர் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியில் தோற்றதால் தொடர் 1-1 என சமன் ஆனது. கேப்டன் ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி, ஜெமிமா, ஷபாலி ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணி ரன் எடுக்க திணறி வருகிறது. ஆட்டம் மதியம் 1.30 மணி முதல் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகும்.
1) உலகின் மிகப்பெரிய தீவு எது? 2) BNS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் எது? 4) ஆசியாவின் முதல் பெண் பிரதமர் யார்? 5) பூஜ்ய நேரம் என்றால் என்ன ? 6) 22,000 Km தூரம் பறந்து செல்லக் கூடிய பறவை எது? 7) ஆம்னி பஸ் முதன்முதலில் ஓடிய நாடு எது? 8) குறுந்தொகை நூலை தொகுத்தவர் யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை சவரன் ₹59,000ஐ தொட்டு புதிய உச்சம் எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹59,000க்கும், கிராமுக்கு ₹60 உயர்ந்து ஒரு கிராம் ₹7,375க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான SWIGGY, புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக ₹11,300 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், முதலீட்டாளர்களின் வசமுள்ள பங்குகளை விற்று ₹6,800 கோடியும், புதிய IPO மூலம் ₹4,500 கோடியும் நிதி திரட்டவுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் வரும் நவ.6-8இல் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என ஸ்விக்கி அறிவித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை, ₹371 – ₹390 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் சங்கீதா (40). இந்நிலையில், அப்பள்ளிக்கு புதிதாக சேர்ந்த 22 வயது ஆசிரியை ஒருவரை, சங்கீதா வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்படி, வீட்டுக்கு வந்த அவருக்கு சங்கீதா கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் லேசாக மயங்கிய ஆசிரியையிடம் சங்கீதா தவறாக நடந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
அமாவாசை திதியின் காரணமாக தீபாவளி பண்டிகையை OCT.31ல் கொண்டாட வேண்டுமா (அ) NOV.1ம் தேதி கொண்டாட வேண்டுமா என்பதில் பலர் குழப்பமடைந்துள்ளனர். இந்த ஆண்டு அமாவாசை திதி OCT.31 அன்று பிற்பகல் 3:52 மணிக்குத் தொடங்கி NOV. 1 மாலை 6:16 மணிக்கு முடிவடைகிறது. 31ம் தேதி இரவில் அமாவாசை வருவதாலும், லக்ஷ்மி பூஜைக்கான நேரமும் இரவில் வருவதாலும் அன்றைய தினத்திலேயே தீபாவளியைக் கொண்டாட ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார். X பதிவில், ‘லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டு-அப்களை ரசித்தேன். அறிமுக படத்தை வழங்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்தார்.
சென்னையில் உள்ள 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் Platform டிக்கெட் விற்பனையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. Central, Egmore, Tambaram, Perambur ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் முதியோர், மருத்துவத் தேவைக்காக செல்வோருக்கு சலுகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீபாவளி கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது சதவீதம் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் எடுக்கும் அதிகபட்ச சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி IND அணி அதிகபட்சமாக 74.56% எடுக்கும் என கணித்துள்ளது. IND அணிக்கு 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 4-ல் வெற்றி பெற வேண்டும்.
Sorry, no posts matched your criteria.