India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை களைகட்டியுள்ள நிலையில், இதை பயன்படுத்தி நூதன முறையில் சிலர் மோசடியில் இறங்கியுள்ளனர். தனித்தனியாக வெடிகள் வாங்குவதை விடுத்து, சிலர் கிப்ட் பாக்ஸ் வாங்குவார்கள். அதில் சில கிப்ட் பாக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள பட்டாசு வகைகள், பட்டியல் எண்ணிக்கைக்கு பதிலாக பெயருக்கு சில வெடிகள், கம்பி மத்தாப்பு வைத்து ஏமாற்றப்பட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
➤மேஷம் – பாராட்டு
➤ரிஷபம் – பொறுமை
➤மிதுனம் – போட்டி
➤கடகம் – வெற்றி
➤சிம்மம் – நற்செயல்
➤கன்னி – சுகம்
➤துலாம் – நலம்
➤விருச்சிகம் – முயற்சி
➤தனுசு – பேராசை ➤மகரம்- புகழ்
➤கும்பம் – உயர்வு ➤மீனம் – ஆதரவு
3 மனைவிகள், 11 குழந்தைகளுக்காக ₹295 கோடி மதிப்பில் பண்ணை பங்களாவை, டெக்ஸாசில் எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 வில்லா, 6 படுக்கையறை கொண்ட பிரமாண்ட வீடும் அதில் அடங்கியுள்ளது. இந்த பங்களா வாங்கிய விஷயத்தை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டுமென அவர் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவே அவர் இந்த வீட்டை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சியில் மிக கனமழையும், வேலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, தீபாவளிக்கு ஷாப்பிங் சென்றவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.
கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீர்கள். ஈகோ, கோபம் என எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவர் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில், ஒரு திராவிட கட்சியின் ஓட்டு 12%க்கும் கீழே சரிந்து விடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடித்துச் சொல்கிறார். மேலும், அந்த கட்சியின் தொண்டர்கள் வெளியே வருவார்கள். இது காலத்தின் கட்டாயம்; அது எந்த கட்சி என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் வருகையால் திமுக வாக்கு சரியுமா?, அதிமுக வாக்கு சரியுமா? என்பதை கமெண்ட் பண்ணுங்க.
நவ.1 முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்புக்கு நடிகர் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது. படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. இதனால், திரைத்துறை பாதிக்கப்படுவது தொழிலாளிகள் மட்டுமல்ல, தயாரிப்பாளர்களும் தான். வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற செயலை நடிகர் சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது என தெரிவித்துள்ளது.
இந்தியா- சீனா இடையே முக்கிய புரிந்துணர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சீன தூதர் Xu Feihong தெரிவித்துள்ளார். BRICS மாநாட்டின்போது இருநாட்டு தலைவர்களிடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், வருங்காலத்தில் இருநாட்டு உறவுகள் மேம்பட அது வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அண்டை நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பது இயற்கை, அதை எப்படி கையாள்வது என்பதுதான் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
PAK ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த IND அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற PAK வர வேண்டும் என முகமது ரிஸ்வான் வலியுறுத்தியுள்ளார். IND அணி மீதும், வீரர்கள் மீது தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு மரியாதை இருப்பதாகவும், தங்கள் நாட்டிற்கு வந்து இந்தியா விளையாடினால் அவர்கள் இரட்டிப்பு சந்தோஷம் அடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 2025 பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாக்.கில் நடைபெறுகிறது.
தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாக கொண்டாடி மகிழ்வோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், தற்போது வாழ்த்து கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.