India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி மூலம் 20 இளைஞர்களுக்கு HIV தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலார்கட்டி பகுதியை சேர்ந்த இந்த சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் பணம் தேவைப்பட, உள்ளூர் இளைஞர்களுடன் உறவு கொண்டிருக்கிறார். அந்த வகையில் 20 பேருக்கு எயிட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பரவியுள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.
தீபாவளியை முன்னிட்டு கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொண்டனர். டெம்சோக், டெப்சாங் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த வீரர்களை இருநாடுகளும் நேற்று முழுமையாக திரும்பப் பெற்ற நிலையில், இன்று இனிப்பு வழங்கியுள்ளனர். 2020 கல்வான் மோதலுக்கு முன்பு இருந்த ரோந்து உரிமை தொடர்பாக கமாண்டர் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளியன்று வீட்டில் உள்ள சில விசேஷ இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். வீட்டின் நுழைவாயில், சமையலறை அறை, துளசி மாடம் போன்ற இடங்களில் விளக்கு வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர கோயில்கள், மடங்கள், மரங்கள் மற்றும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தீபம் ஏற்றினால் நல்லது என்பது ஐதீகம். இந்த தீபத் திருநாளை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? SHARE IT
மூளை தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிஸ்தாவுக்கு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த டஃப்ட்ஸ் பல்கலை. ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் லுடீன், ஜீயாக்சாண்டின் ஆகிய நுண்சத்துகள் உள்ளன. கண் பார்வை குறைபாடு நீக்கி, விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துகள்
பிஸ்தாவில் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, இரும்பு, தாமிரம் & செலினியம் போன்றவை முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.
ஐபிஎல் 2025 தொடருக்கான ஆர்சிபி அணியில், அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து 18 ஐபிஎல் சீசன்களுக்கும் ஒரே அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலி தான். அணி கோப்பையை வெல்லவில்லை என கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அணியை விட்டுக் கொடுக்காமல், அதே அணியில் தொடரும் கோலி, இந்த முறை கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கோப்பையை வெல்வாரா?
தீபாவளி வந்தாச்சு, கொண்டாட்டம் தொடங்கியாச்சு. ஆனால், இந்த மகிழ்ச்சியான நாள் யாருக்கும் துயரத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தெருநாய்கள், கால்நடைகள் மற்றும் பிற உயிர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள். உங்களின் கொண்டாட்டம் அவற்றுக்கு கொடுமையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாலையில் சென்றுவரும் மக்களை பற்றியும் அக்கறை கொள்ளுங்கள். BE SAFE!
2025 ஐபிஎல் ரிட்டென்ஷன் பட்டியலில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசன். அவரை 23 கோடிக்கு தக்க வைத்துள்ளது அந்த அணி. அடுத்த இடங்களில் விராட் கோலி (RCB), நிக்கோலஸ் பூரன் (LSG) ஆகியோர் 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளனர். சஞ்சு சாம்சன் (RR), ஜெய்ஸ்வால் (RR), பும்ரா (MI), பாட் கம்மின்ஸ் (SRH) 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர்.
‘குயிக் காமர்ஸ்’ எனப்படும் ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரம் அழிவின் விளிம்பை எட்டியுள்ளது. இந்த பகாசுர ஆன்லைன் வர்த்தகத்தால் மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், சாலையோர வணிகர்கள் என 2 லட்சம் கடைகள் மூடுவிழா கண்டுள்ளன. ‘பண்டிகை கால சேமிப்பு’ என்ற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு நிலை மனமாற்றமும் போக்கும் எளியவர்களின் நிலையை எண்ணி மாற வேண்டும்.
தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ்(18 கோடி), கிளாசன் (23 கோடி), அபிஷேக் சர்மா (14 கோடி) நிதிஷ் குமார் ரெட்டி (6 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். அணியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.