India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 7 ஆண்டுகளில் பாதியாக குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தாவ்ரா, 2017ஆம் ஆண்டில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 6%ஆக இருந்ததாகவும், ஆனால் தற்போது அது 3.2%ஆக குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை 58%ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Fair and Handsome கிரீமை 3 வாரம் தொடர்ந்து யூஸ் செய்தால், முகம் பளபளப்பாக மாறும் என்ற விளம்பரத்தை பார்த்து வாங்கினார் நிகில். ஆனால், அவரது நிறத்திலோ எந்த மாற்றமும் இல்லை. இதுபற்றி EMAMI நிறுவனத்துக்கு புகார் அளித்தும் பயனில்லாததால், நுகர்வோர் கோர்ட்டை நாடினார். 12 வருட போராட்டத்துக்கு பின் EMAMI நிறுவனத்துக்கு ₹15 லட்சம் அபராதமும், நிகிலுக்கு ₹40,000 இழப்பீடும் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினசரி அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் உங்கள் உடலுக்கு வேகமாக வயதாகும் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு. குனிந்து கொண்டே போன் பார்ப்பது, ஸ்க்ரால் மற்றும் டெக்ஸ்ட் செய்வது போன்ற செயல்பாடுகளால் கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, மற்றும் விரல் எலும்பு மூட்டுகளும் தசைகளும் விரைவாக பாதிப்படைகின்றன. போன் அடிக்ஷனும் ஏற்படுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதித்து, ஆயுளையும் குறைக்குமாம். உஷார்!
உக்ரைனை சாக்காக வைத்து தன்னை தொடர்ந்து சீண்டும் நேட்டோ நாடுகளை டார்கெட் செய்யும் வகையில், 2025-ல் பெலாரஸில் அதிநவீன Oreshnik ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. நொடிக்கு 3 கிமீ வேகம் செல்லும் இந்த ஏவுகணை, பாரீஸை 8.3 நிமிடத்திலும், லண்டனை 8.8 நிமிடத்திலும் தாக்கும். ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் வல்லமையும் கொண்டது. இதை அண்மையில் உக்ரைனில் ஏவி ரஷ்யா சோதித்தது குறிப்பிடத்தக்கது.
➤மேஷம் – முயற்சி ➤ ரிஷபம் – இன்பம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – செலவு ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – வெற்றி ➤துலாம் – உறுதி ➤விருச்சிகம் – சுபம் ➤தனுசு – தனம் ➤மகரம் – பக்தி ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அன்பு.
சிலர் வேலை வெட்டி இல்லாமல் போகிறபோக்கில் கருத்து சொல்லிச் செல்கிறார்கள் என்று அண்ணாமலையின் விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் நாகரீகமாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், அவர்களுடைய இருப்பை காட்டுவதற்காகவே அவதூறு கருத்துகளை பரப்புவதாகவும் சாடியுள்ளார்.
தலையணை இல்லாமல் தூங்கினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1) தலையணை இல்லாமல் படுப்பதால் முதுகெலும்பு நேராக இருக்கும். இதனால் முதுகு மற்றும் கழுத்து வலி வராது. 2) தலைக்கு நல்ல ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் கிடைப்பதால் அந்த நாளே சுறுசுறுப்பாக இருக்கும். தலைவலியும் வராது 3) உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால் மன அழுத்தம் பல மடங்கு குறைகிறது.
மனைவி டார்ச்சர் தாங்காமல் பெங்களூரில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்த நிலையில், அவரது மனைவி நிகிதா சிங்கானியாவின் குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நடந்த விஷயத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனினும், அதுல் மரணத்திற்கு வருந்துகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். போலியாக வரதட்சணை புகார் கொடுத்து தொந்தரவு செய்ததால், அதுல் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா (105) புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே ஆண்டில் 4 சதமடித்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 9 சதம் விளாசியுள்ள அவர், இந்தியாவில் அதிக சதமடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார். 2ஆவது இடத்தில் 7 சதங்களுடன் மித்தாலி ராஜ் உள்ளார்.
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த தினமான இன்று, அவரது நூல் தொகுப்பை வெளியிட்டு பேசிய PM மோடி, மாபெரும் கவிஞன் பாரதியை பயபக்தியுடன் வணங்குகிறேன் என்றார். பாரதத்தின் தேவையை மனதில்கொண்டு பாடுபட்டவர் பாரதி என்று புகழ்ந்த மோடி, அந்தக் காலத்திலேயே அவருக்கு இருந்த விசாலமான பார்வை தனக்கு வியப்பை தருவதாகவும், தன் ஒவ்வொரு மூச்சையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த மகான் எனவும் புகழாரம் சூட்டினார்.
Sorry, no posts matched your criteria.