India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குவைத்தில் பணியாற்றும் ஆஞ்சநேயா என்பவரின் மகள்(12), ஆந்திராவில் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், உறவினர் (59) ஒருவர், சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த ஆஞ்சநேயா, அந்நபரை கொலை செய்துவிட்டு குவைத் திரும்பிவிட்டார். பெண் குழந்தை மீது கை வைப்பவர்களுக்கு இது எச்சரிக்கை என்றும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 21 நீதிபதிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ஹைகோர்ட்களில் 368, மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் 5,262 பணியிடங்கள் காலியாக உள்ளதும் தெரியவந்துள்ளது. கோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து உங்க கருத்து என்ன?
வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாகக் கழிக்க வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்றில்லை. காரணம், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி?
கொரோனா தொற்று காலத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கைதிகளின் தண்டனையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறைத்துள்ளார். வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பும் வழங்கியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. பைடனின் இந்த கருணை நடவடிக்கையை, மனித உரிமை அமைப்புகள் பாராட்டியுள்ளன.
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் பலியான 7 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் என்றும், நோயாளிகளை பார்க்க வந்த இடத்தில் 7 பேரும் தீயிலும்,புகையிலும் சிக்கி பலியானதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. அதேபோல் கணினியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் தனியார்<<14863166>> ஹாஸ்பிட்டல்<<>> லிப்டுக்குள் மயங்கி கிடந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 மாடி கொண்ட மருத்துவமனையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலின்பேரில் மீட்புக் குழு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது. இதுவரை 32 பேரை அக்குழு மீட்டுள்ளது. மேலும் ஹாஸ்பிட்டலுக்குள் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என ஆய்வு நடக்கிறது.
தினசரி குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் *உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும் *மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும் *நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் *உடல் எடை அதிகரிப்பை தடுக்கும் *படிப்பு, வேலைகளில் கவனக்குவிப்பை, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் *இதயநோய் வரும் ஆபத்தை குறைக்கும்.
➤மேஷம் – அன்பு ➤ ரிஷபம் – செலவு ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – ஈகை ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – உதவி ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – பரிவு ➤தனுசு – பெருமை ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – சினம் ➤மீனம் – தனம்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் அடுத்த 3 போட்டிகளிலும் IND அணி கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும். இதே சூழலில்தான் AUS அணியும் உள்ளது. PCT புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள SA (63), AUS (60), IND (57), SL (45.4), ENG (45.2) ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவுகிறது.
லக்கி பாஸ்கரில் நடித்து வேறலெவல் கம்-பேக் கொடுத்திருக்கிறார் ராம்கி. அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், 22 வயசுல ஹீரோ ஆயிட்டேன். அப்படி நடக்கலைனா, நிலைமை மோசமாயிருக்கும். ஏன்னா நான் படிக்கல. நிறைய பேரு சொல்லுவாங்க, படிக்காதவங்க ஜெயிச்சிட்டாங்கனு. ஆனா அது லட்சத்துல சில பேருதான். ஆனா படிச்சு ஜெயிச்சவங்க கோடி பேரு. ஒரு அண்ணனா சொல்றேன். படிக்குற நேரத்துல படிச்சிருங்க. நிச்சயம் ஜெயிப்பீங்க என்றார்.
Sorry, no posts matched your criteria.