India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளியன்று குழந்தை போல ஜெயலலிதா மாறி விடுவார் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், வெளியில் பார்க்க இரும்புப் பெண்ணாக ஜெயலலிதா இருந்தாலும், அவருடைய மனதில் எப்போதும் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை பார்த்து குதூகலிப்பார். அப்போது அந்த குழந்தை ஜெயலலிதாவை பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு வியூகம் வகுத்து கொடுக்க ₹100 கோடி கட்டணம் வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தனது அரசியல் கட்சி பிரச்சாரங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என சிலர் கேட்பதாகவும், ஒரு கட்சிக்கு வியூகம் வகுத்து கொடுத்தாலே தன்னால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பணம் செலவிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது 10 மாநில அரசுகள் தன்னுடைய உத்தியால் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மோசடிகள் மூலம் கடந்த 10 மாதங்களில் மட்டும் இந்திய மக்கள் ₹2,140 கோடியை இழந்துள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்போடியா, வியட்நாம், மியான்மர் ஆகிய இடங்களில் சீனர்கள் நடத்தும் கால் சென்டர்கள் மூலம் இந்த மோசடிகள் நடப்பது தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 92,334 சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: விருந்தோம்பல் ▶குறள் எண்: 89 ▶குறள் : உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. ▶ விளக்க உரை: விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். SHARE IT.
தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில நாள்களாகவே தகவல் உலவி வருகிறது. அதனால் தான், விவகாரத்து வழக்கு கோர்ட்டுக்கு வந்த 2 முறையும் இருவரும் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகாததால், வரும் 21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை, மகன்களின் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு சேர உள்ளதாக பேசப்படுகிறது.
Bike Ride-ஐ கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு, ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் செய்த ஓட்டுநரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். APP-ல் புக் செய்து வர தாமதமானதால் ரைடை கேன்சல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அப்பெண்ணுக்கு கால் செய்து மிரட்டல் விடுத்ததோடு, வாட்ஸ்அப்பில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். தற்போது ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மாதத்தில் 2 நாள்கள் UPI சேவையை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக HDFC
வங்கி தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 5ஆம் தேதி நள்ளிரவு 12 முதல் 2 மணி வரையிலும், 23ஆம் தேதி நள்ளிரவு 12 முதல் 3 மணி வரையிலும் UPI சேவை நிறுத்தப்பட உள்ளது. இந்த நாள்களில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள், Rupay கிரெடிட் கார்டு, Gpay, Phone Pe, Paytm, WhatsApp Pay ஆகியவற்றில் UPI சேவையை பெற முடியாது.
▶நவ. 3 (ஐப்பசி 17) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM, 03:15 PM – 04:15 PM ▶கெளரி நேரம்: 01:45 AM – 02:45 AM, 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶திதி: துவிதியை ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: விசாகம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி.
தற்போது ‘குபேரா’ படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார். அதேவேளையில், ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்க உள்ளார். மேலும், ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷே தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித்ஷா திட்டமிடுவதாக அந்நாட்டு அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவை இழிவுபடுத்துவதற்காக இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாகவும், இது இருநாட்டு உறவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.