India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மெய்யழகன்’ படத்தை அன்புமணி வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முன்னோர் வழி, வம்சாவளி, கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை. குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும், பெரிய தாத்தா, சின்ன தாத்தா அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இளம் தலைமுறைக்கு எடுத்துக் கூறிய சிறந்த படம். சிறுவயது நினைவுகளை எனக்குள் கொண்டுவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய வீரர் ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி சீசன் தான் தனது கடைசி தொடர் என்று கூறியுள்ளார். வரும் IPL ஏலத்தில் கூட அவர் பதிவு செய்யவில்லை. இந்தியாவுக்காக அவர் 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், IPLல் KKR, CSK, PBKS, SRH, GT ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஹோண்டா ஆக்டிவா 7ஜி மாடலை இந்தியாவில் 2025’ல் அறிமுகம் செய்ய உள்ளது. மேம்பட்ட வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் ரைட் அனுபவத்தை உயர்த்துவதை நோக்கமாக உள்ளது. விலை ரூ. 80,000’லிருந்து இருக்கலாம் எனப்படுகிறது. BS6’ல் 110cc இன்ஜினுடன் வெளிவரலாம். ஸ்கூட்டரில் Digital Instrument Cluster மற்றும் ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தனது அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். தவெக செயற்குழுவில் விஜய் பேசியது குறித்து அவரது கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி ரசிகர்களை அரவணைத்து செல்ல வேண்டுமென அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தனர். திரைத்துறையில் விஜய் Vs அஜித் என்றிருந்த போட்டிக்களம், விஜய் Vs ரஜினி என மாறியது. விஜய், ரஜினி ரசிகர்கள் இணையத்தில் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
சிவகங்கை நாட்டாகுடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் தனது கடையை திறக்க சென்ற அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி சாய்த்துள்ளனர். தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிந்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி முதல் தொடர்ந்து நடந்த 3 கொலைகளால் அம்மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
Intel நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Intel, AI தொழில்நுட்ப வளர்ச்சியால் ‘Nvidia’ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் திணறி வருகிறது. இந்நிறுவனம் 3ஆவது நிதியாண்டில் ₹1.39 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 லட்சம் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 100 வயதை கடந்தவர்கள் 47,392 பேர் உள்ளனர். உ.பியில் 39,000, கர்நாடகாவில் 17,937, ராஜஸ்தானில் 17,241, தமிழகத்தில் 16,306 பேர் 100 வயதை கடந்துள்ளனர். நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது. கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கும் இந்த முகாமில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். நவ. 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட வாரியாக பங்கேற்கிறார்கள். நவ. 8ஆம் தேதி சென்னை, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
நவம்பர் 22-ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெறவுள்ளது. நடப்பு WTC பைனலுக்கு இந்திய அணி முன்னேற, இந்த தொடரில் 4 வெற்றிகளை பெறுவது அவசியம். இந்த சூழலில், வீரர்களின் வயதை குறிப்பிட்டு, இத்தொடருடன் சிலர் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நட்சத்திர ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித், கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் இருவர் ஓய்வு பெறுவார்கள் எனப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன..?
பண்டிகை காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதில் வாஷிங் மெஷின்களின் விற்பனை 5%, டிவிகளின் விற்பனை 7%, ஃபிரிட்ஜ் விற்பனை 12% வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். கடந்தாண்டின் பண்டிகை கால விற்பனை அதற்கு முந்தைய ஆண்டை விட 30% அதிகரித்திருந்தது.
Sorry, no posts matched your criteria.