News December 15, 2024

எனக்கு வேற வழி தெரியல சார்..!

image

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள உறவினரின் வைரக் கம்பெனியில் வேலை செய்துவந்தார் மாயூர் தரப்பரா. அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை பிடிக்கவில்லை. ஆனால், உறவினரிடம் சொல்ல பயம். இந்நிலையில், விரல் இருந்தா தானே வேலை செய்ய சொல்வீங்கன்னு தன் இடதுகையில் 4 விரல்களை துண்டித்துக் கொண்டார். ஒரு விபத்துக்குபின் விரல்கள் காணாமல் போனதாக இவர் போலீஸில் சொல்ல, CCTV உண்மையை போட்டுடைத்துவிட்டது.

News December 14, 2024

ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்: PM

image

அரசியலமைப்பின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தை நேசிக்கும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு பெருமையான தருணம் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க 370 சட்டப்பிரிவை நீக்கியதாகவும், ஆனால் இதில் கூட சிலர் விஷ கருத்துக்களை விதைத்து பிரிவினையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 14, 2024

10 ஆண்டுகளில் காணாத உயர்வை கண்ட தங்கம் விலை

image

நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்திய ரூபாயின் மதிப்பில், தங்கம் விலை ₹7,300ஐ எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். இதற்கு புவிசார் அரசியல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், அதிகரித்த முதலீடு, அமெரிக்காவின் கொள்கை முடிவு போன்றவையே காரணமெனக் கூறியுள்ளது. 2024 அக். நிலவரப்படி, RBI 77 டன் தங்கம் வாங்கியுள்ளது.

News December 14, 2024

குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் ஒரேநாளில் பிறந்தநாள்..!

image

ஒரு தம்பதிக்கு ட்வின்ஸ் அல்லது 3,4 குழந்தைகள் கூட ஒரே பிரசவத்தில் பிறந்ததை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு குடும்பமே ஒரே தேதியில் பிறந்த ஆச்சரியம் நடந்துள்ளது. அமீர் அலி – கதிஜா தம்பதி மற்றும் அவர்களது 7 குழந்தைகளும் ஆண்டுதோறும் ஒரேநாளில் (ஆக.1ஆம் தேதி) பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இத்தகைய தனித்துவம் வாய்ந்த அரிதான குடும்பம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

News December 14, 2024

சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

image

கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், பஸ்களும் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல், இருமுடியுடன் 18 படி ஏறி வந்து ஐயப்பனை தரிசித்தார். அப்போது, அவருக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

News December 14, 2024

இபிஎஸ்-க்கு எதிராக மீண்டும் மனு

image

இபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இபிஎஸ் தலைமையேற்ற பின் தொடர் தோல்வியால், மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கை இழந்து வருவதாகவும், திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

News December 14, 2024

AUS மண்ணில் சச்சின் மகளின் Wow க்ளிக்ஸ்!

image

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியை காண சென்ற சாரா டெண்டுல்கர், கப்பா மைதானத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஜாஹிர் கான் உள்ளிட்ட பலருடன் எடுத்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் நாளை அதிகாலை 5.20 மணிக்கு தொடங்க உள்ளது.

News December 14, 2024

மகாராஜாவுக்கு அடுத்து சீனாவில் வெளியாகும் படங்கள்

image

இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்னையால் 2020-க்கு பிறகு இந்திய திரைப்படம் எதுவும் சீனாவில் வெளியாகவில்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியான முதல் படம் மகாராஜா. சீனாவில் அதிகம் வசூலித்த டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில் மகாராஜா இடம்பெறும் என கணிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 12th ஃபெயில், லாப்படா லேடீஸ் ஆகிய பாலிவுட் படங்கள் சீனாவில் வெளியாக தயாராகி வருகின்றன.

News December 14, 2024

இதுக்கெல்லாம் பேரு என்ன தெரியுமா..

image

சத்தீஸ்கரில் ரூப்சந்த் என்ற விவசாயி, தனது பண்ணையை விரிவுப்படுத்த அங்குள்ள SBI வங்கியை அணுகி லோன் கேட்டுள்ளார். அதற்கு அந்த வங்கி மேனேஜர், லோன் வேண்டுமானால் அடிக்கடி தனக்கு கோழியை தனக்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அப்பண்ணையில் மொத்தமுள்ள 900 கோழிகளையும் (விலை ரூ.38,900) மேனேஜர் ஓசியிலேயே தின்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசாயி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

News December 14, 2024

விவசாயக் கடனுக்கு RBI சொன்ன GOOD NEWS

image

சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ₹1.6 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக அண்மையில் RBI உயர்த்தியது. அந்தவகையில், 2025 ஜன.1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என RBI அறிவித்துள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!