India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையம் அருகே, அமைச்சர் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பஞ்சப்பூரில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்த நேரு, அப்படி இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல், CM குடும்பத்துடன் நேருவுக்கு மோதல் இருப்பதாக செய்தி பரவியதையும் அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
பயனர்களை Engaging-ஆக வைத்துக் கொள்ள Spotify நிறுவனம் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் இருப்பதை போன்ற Direct Message (DM) அம்சத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாடல்கள், பாட்காஸ்ட், ஆடியோ புத்தகங்களை விரும்பிய நபர்களுக்கு அனுப்புவதோடு Chat-ம் பண்ணலாம். இதில் பயனர்கள் தங்களுக்கு வரும் Request-களை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும்.
இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது குறித்து பல வெளிநாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்ததற்கு சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வெளிநாட்டினர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாகவும், இந்திய கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லாமல் வேண்டுமென்றே விவாதத்தை ஏற்படுத்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
USA-வின் புதிய வரி விதிப்பு நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, ஜவுளி, இறால், பர்னிச்சர், வைரம், வேளாண் உற்பத்தி, ஸ்டீல், காப்பர், லெதர் 50% வரி விதிப்பின் கீழ் வருகிறது. இத்துறைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், டிரம்ப் கடைசி நேரத்தில் வரி விதிப்பை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனக்கு நடிப்பதில் விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் பேசிய அவர், பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திறமைசாலிகளுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், அது அம்மா போன்றதொரு உணர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது ஒரு படத்தை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாள்களில் PM மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், மோடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்ததாக ஜெர்மன் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நியாயமும் இல்லாமல், இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் அந்த கோபத்தில் அவர் அப்படி செய்துள்ளார் என்றும், இதுவே இந்தியா சீனாவை நோக்கி திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.
2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.