India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என மக்களை பிளவுபடுத்துவதாக ஆளுநர் R.N.ரவி தெரிவித்துள்ளார். பாரதம் பல்வேறு கலாசாரங்களை கொண்டது, ஒரே கலாசாரம் என்பது பாரதத்தில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், கலாசார நிகழ்ச்சிகள் மக்களை ஒன்றிணைக்கின்றன என்றார். மேலும், பழைய பாரதத்தில் பிரிவினை என்பது அறவே இல்லை; பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
பிசிசிஐ-க்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்பு செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐசிசி தலைவரான நிலையில், பிசிசிஐ-க்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரோஹன் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது பற்றி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் (opinion poll) வெளியாகி உள்ளன. ஆரம்பத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க டிரம்புக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் இந்த தேர்தலில் போட்டி கடுமையாக உள்ளது. அமெரிக்க மக்களின் தீர்ப்பு நவ.06-ல் தெரிந்துவிடும். (நன்றி: India Today)
ODI-யில் ஆஸ்திரேலிய அணிக்காக வேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பிரட் லீ சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். PAK அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். பிரட் லீ 55 இன்னிங்சில் 100 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஸ்டார்க் 54 இன்னிங்சில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார். மெக்ராத் 56 இன்னிங்சில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டு மாணவர்கள் பாதித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஏற்கெனவே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்த இந்தப் பள்ளியை சரியாக ஆய்வு செய்யாமல் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாமல் செயல்பட அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்திரி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் வசூலை குவித்து வருகிறது. வெளியான 4 நாளில் உலகம் முழுவதும் சேர்த்து ₹55.4 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளை விடவும் தற்போது அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
30 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமாக வாழ…
➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்.
➤வேலை பளுவால் உணவை தவிர்க்க கூடாது.
➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி.
➤மது, புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
➤குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசினால், ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும்.
சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டுகளில் வழக்காடு மொழியாக ஹிந்திக்கு அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, CJI சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அப்படியெனில் எல்லா மொழிகளிலும் வாதாடலாமா? எதற்கு ஹிந்திக்கு மட்டும் அனுமதி கேட்கிறீர்கள்? எனக் கேட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
பொதுமக்கள், முதலீட்டாளர்களின் வசதிக்காக NSEIndia என்ற புதிய மொபைல் App-ஐ இந்திய தேசிய பங்குச் சந்தை(NSE) அறிமுகம் செய்துள்ளது. மேலும், NSE-யின் இணையதளமும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தை நிலவரம் அறியும் வகையில் Realtime market insights, Market trends, Equity market data, Derivative insights போன்ற விவரங்களை இந்த ஆப் வழங்கும். SHARE IT!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இம்மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 31ஆம் தேதி அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் மொத்தம் 46 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலையில், மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க 10 அணிகளிடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. CSK எந்த வீரரை எடுக்கும்?
Sorry, no posts matched your criteria.