India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடாவில் இந்திய தூதரக முகாம் அமைந்துள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்களால் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும், தூதரக அதிகாரிகளை அச்சுறுத்த கோழைத்தனமான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், கனடா அரசு நீதியை உறுதிபடுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நாடு முழுவதும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசியலில் இது பழைய தந்திரம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். நவ.13இல் தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில், பண்டிகைகளை காரணம் காட்டி நவ.20க்கு தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை ஒத்திவைத்துள்ளது.
ரோகித் மற்றும் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் IND வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் இருவராலும் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் என்ன செய்ய போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய வீரர்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தவில்லை எனில் ஆஸி. அணியை எதிர்கொள்ளவது சிரமம் எனவும் கூறியுள்ளார்.
முடா நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. பார்வதியிடம் கடந்த 25ஆம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில், நவம்பர் 6ஆம் தேதி சித்தராமையாவிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
➤மேஷம் – வெற்றி
➤ரிஷபம் – செலவு
➤மிதுனம் – தெளிவு
➤கடகம் – பயம்
➤சிம்மம் – தடங்கல்
➤கன்னி – மேன்மை
➤துலாம் – சோதனை
➤விருச்சிகம் – முயற்சி
➤தனுசு – நலம் ➤மகரம்- சிரமம்
➤கும்பம் – ஈகை ➤மீனம் – உழைப்பு
பிரபல பிராண்டான NIKEன் லோகோவை வடிவமைக்க கிராஃபிக் டிசைனர் கரோலின் டேவிட்சன் 35 டாலர்கள் ஊதியமாகப் பெற்றார். 1971ல் படித்துக் கொண்டிருந்தபோதே இந்த லோகோவை வடிவமைத்தார். லோகோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் டேவிட்சன் 500 பங்குகளை பரிசாக வழங்கினர். அதன் மதிப்பு இன்று (3 மில்லியன் டாலர்) இந்திய ரூபாயில் ₹25.2 கோடியாகும்.
ODI போட்டிகளில் PAK எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் WI அணியை, ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. PAK எதிரான வெஸ்ட் இண்டீஸ் (71 வெற்றிகள், 137 ஆட்டம்) வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற PAK-க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் AUS (71 வெற்றிகள், 109 ஆட்டம்) WI சாதனையை சமன் செய்துள்ளது. இலங்கை, இங்கிலாந்து, இந்திய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வளர்ச்சியே இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் என்ன மாதிரியான வளர்ச்சியை Deputy CM உதயநிதி ஆய்வு செய்ய வருகிறார் என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்தவித திட்டமிடலும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், கஞ்சா, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையை முதலில் செயல்படச் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.