India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து வரும் 3 கதாபாத்திரங்களின் கெட்டப் லுக் என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. Clean Shave-ல் இருப்பது ‘குட்’ கேரக்டரின் கெட்டப் எனவும், கையில் டாட்டூவுடன் இருக்கும் கெட்டப் ‘பேட்’ கேரக்டர் எனவும், கோட் சூட்டுடன் பெப்பர் சால்ட் லுக்கில் சிரித்தவாறு இருக்கும் லுக் ‘அக்லி’ கேரக்டருக்கான கெட்டப் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஆதவ் அர்ஜுனாவின் முழக்கம் விசிகவின் கொள்கை தான் என்றாலும், தேர்தல் கூட்டணிக்குள் சிக்கிய அக்கட்சியால், அதை உயர்த்திப் பிடிக்க முடியவில்லை. மேலும், கட்சிக்குள் நீண்டகாலம் இருப்பவர்களே அமைதியாக இருக்கும்போது, மன்னராட்சி என்றெல்லாம் இவர் நேரடியாக பேசுவது பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால், திருமாவால் அனைத்து தரப்பையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
2025ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா பயணிக்கலாம். முன்னதாக, கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவும் இந்தியாவும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்தது. ரஷ்யாவிற்கு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ல் 60,000க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர். இது 2022 உடன் ஒப்பிடுகையில் 26% அதிகம்.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகிய நிலையில், திருமாவளவனுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சியிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். அரசியல் களத்தில் என்னை களமாடச் செய்த விசிக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனது நியாயமான கோபங்கள் கூட விவாதப்பொருளாவதை நான் விரும்பவில்லை. எளிய மக்களை நோக்கிய எனது அரசியல் பயணம் உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும் எனக் கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி என்ற ரீதியில் முன்னாள் பிரதமர் நேருவின் மாடல் தோல்வியடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேருவின் வெளியுறவுக் கொள்கை காலாவதியாகிவிட்டதாவும், அதை 2014 முதல் மத்திய அரசு சரிசெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஃபெயிலியரான மாடலை தொடர வேண்டும் என சில பிரிவினர் வலியுறுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும், வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா மறைமுக செயல்திட்டத்துடன் செயல்படுவதாக தோன்றுவதாக திருமா இன்று கூறிய நிலையில், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பாலிவுட் சினிமாவை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். புஷ்பா உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுவதற்கு, அது மக்களின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தியதாக இருப்பதுதான் காரணம் எனவும், பாலிவுட் படங்கள் கிளாமர் மற்றும் போலித்தனமான கதையம்சங்களில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி படங்களை காட்டிலும், தென்னிந்திய படங்களே பாலிவுட்டில் அதிக வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அருகே 2 பெண் குழந்தைகளை நிர்கதியாக தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவரிடம் வீடியோ காலில் பேசி விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மறைவை அறிந்த கணவனும் சிங்கப்பூரிலேயே தற்கொலை செய்துகொண்டார். இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என PMK நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தான் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் நீக்கமற கஞ்சா நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டினார். எதிர்கால இளைஞர்களை காக்க ஒரு சொட்டு மது இல்லை, என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகளை அப்போதைய ஆட்சியாளர்கள் வெட்டியதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்பு விழா அன்று கோவில் கட்டிய தொழிலாளர்கள் மீது பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார். பாஜக தலைமையிலான இன்றைய இந்தியா தனது தொழிலாளர் சக்தியை பாதுகாத்து வருகிறது” என பெருமிதமாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.