India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணலியில் பச்சரிசி (100g), பாசிப் பருப்பு (100g), உளுந்து (250g) நன்றாக வறுத்து, மாவு பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், வடிகட்டிய வெல்லப் பாகு (500ml), பால் (கால் கப்) ஊற்றி கொதிக்க விடவும். பின் அடுப்பை சிம்மில் வைத்து, மாவு கலவையை சேர்த்து கிளறவும். நன்கு வெந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கும்மாயம் ரெடி.
அமரன் படக்குழுவுக்கு தமிழக முன்னாள் CRPF நலன் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தில் தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளியையொட்டி, வெளியான இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ளங்கை அளவு பெரிய ராட்சத Fen Raft சிலந்திகளில் தற்போது 10,000க்கும் மேற்பட்ட இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண் சிலந்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. செஸ்டர் உயிரியல் பூங்காவில் அழிவின் விளிம்பில் இருந்த இந்த சிலந்திகளை காப்பாற்ற 2011-ல் Royal Society for the Protection of Birds முயற்சி எடுத்தது. 100க்கும் மேற்பட்ட சிலந்திக்குஞ்சுகள் சோதனைக் குழாயில் கவனமாக வளர்க்கப்பட்டு வந்தன.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த் பேசும் போது, ”நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடியதையும், கேப்டனாக மோசமாக செயல்பட்டதையும் ஏற்றுக்கொள்ள ரோஹித்திடம் தைரியம் இருந்தது. நடைபெறவுள்ள BGT தொடரில் ரோஹித் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். ரோஹித்திற்கு வயதாவதை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.8ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
ரப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது. Young Professionals பொறுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: UG டிகிரி (Agri, Hortic, Forestry). வயது வரம்பு: 20-30. ஸ்டைபண்ட்: ₹40,000. தேர்வு முறை: எழுத்து & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.13. கூடுதல் விவரங்களுக்கு ARC லிங்க்கை கிளிக் செய்யவும்.
தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தி திரையுலகுக்கு செல்லும் நடிகைகள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்வதாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மும்பையில்தான் தங்க வேண்டும். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இதை செய்ய வேண்டும். மற்ற மொழி திரையுலகை ஒப்பிடும்போது, பாலிவுட்டில் போட்டி அதிகம்” என்றார்.
மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை நீக்கி, பலப்படுத்தும் ஆற்றல் சிவப்பு மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் காரில் மூச்சுத்திணறி 4 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 2- 7 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டின் அருகே இருந்த காருக்குள் ஏறி விளையாடியபோது திடீரென கதவு மூடியதால், வெளியே வர முடியாமல் தவித்த குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். குழந்தைகள் இறந்த நிலையில் இருப்பதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.
IPL-ல் கம்பீர் – கோலி மோதல் மிகவும் பேமஸ். 2012 மற்றும் 2015 RCB vs KKR போட்டிகளில், 2023-ல் LSG vs RCB போட்டியில் இருவரின் சண்டையை எளிதில் மறந்து விட முடியாது * 2012-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரசிகர்களால் கடுப்பாகி விராட் நடுவிரலைக் காட்டியது சர்ச்சையானது * 2015-ல் WC தொடரின் போது, அனுஷ்காவுடன் வெளியான கட்டுரையால் பத்திரிகையாளரை கடுமையாகச் சாடினார் கோலி.
Sorry, no posts matched your criteria.