India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களான விராட், ஸ்மித், ரூட், வில்லியம்சனை FAB4 என அழைக்கின்றனர். இவர்களில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2021-ல் 27 சதத்துடன் முதலிடத்தில் இருந்த கோலி, தற்போது 30 சதத்துடன் 4வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆனால், 2021-ல் 17 சதத்துடன் 4வது இடத்தில் இருந்த ரூட், இந்த காலகட்டத்தில் 19 சதம் அடித்து 36 சதங்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி நடைபெற்று முடிந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் தங்க ஜரிகை கொண்ட மடிசார் புடவையை அணிந்திருந்தார். அனிதா டோங்ரே என்ற பிரபல வடிவமைப்பாளரின் மேற்பார்வையில் நெய்யப்பட்ட காஞ்சி பட்டு புடவையான இதனை நெய்ய 405 மணி நேரம் ஆனதாம். இதில் கீர்த்தி சுரேஷ் எழுதிய கவிதை ஒன்றும் சேர்த்து நெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ₹3 லட்சம் என்கிறார்கள்.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையவிருப்பதாக தகவல் உலா வருகிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், “எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களை சந்தித்து முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பற்றி எரிந்த சூழலில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அர்த்தம் மண்டபத்தையும் கருவறை போன்றே பாவிப்பதாகவும், அதனுள் ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லையென்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை, இளையராஜா ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
2024இல் நிகழ்ந்த அரசியல் தலைவர்கள் படுகொலைகள், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகளைப் பேச வைத்துள்ளது. சென்னையில் BSPஇன் ஆம்ஸ்ட்ராங், நெல்லையில் காங்கிரஸின் ஜெயக்குமார், மதுரையில் NTKவின் பாலசுப்பிரமணி, சேலத்தில் அதிமுகவின் சண்முகம், சிவகங்கையில் கடந்த ஆகஸ்ட்டில் நிகழ்ந்த BJP நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்டோரின் படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிளாசிக் படமான சூது கவ்வும் படத்தின் 2ஆம் பாகத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்க, அவருடன் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் படம் வெளியானது. உங்களுக்கு படம் பிடித்திருந்ததா? முதல் பாகத்திற்கு 2ஆம் பாகமும் ஈடு கொடுத்ததா?
தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கென்று புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <
இந்திய வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ₹12 லட்சம் கோடி கடன்களை write-off செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், சுமார் ₹6.5 லட்சம் கோடி, பொதுத்துறை வங்கிகளால் கடந்த 5 ஆண்டுகளில் write-off செய்யப்பட்டவை என்கிறது புள்ளி விவரங்கள். இவை, தள்ளுபடி செய்யப்பட்ட லோன்கள் அல்ல என்று அரசு கூறினாலும், இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
கோலி, 3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியடைய செய்துள்ளார். மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை கவர் ட்ரைவ் ஆட முயன்று அவுட்டாகி இருக்கிறார். கோலி தன்னுடைய ஆட்டத்தை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தில் உள்ளார். இது அவரது வழக்கமாகவே மாறிவிட்டது எனவும், அவர் ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
BGT தொடரின் மூன்றாவது போட்டி அவ்வப்போது மழையால் தடைபட்டு வருகிறது. மூன்றாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கெனவே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, ஆஸி., பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் மட்டும் மூன்றாவது முறையாக போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.