India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ. 74,320ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ரூ.285-ம், 1 சவரன் ரூ.2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ரூ.2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
RCB பவுலர் புவனேஷ்வர் குமார், நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், IPL-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புவனேஷ்வர் குமார் 185 மேட்சில், 193 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 214 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். சாஹலை முந்துவாரா புவனேஷ்வர் குமார்?
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வாரி இறைத்துள்ளார் CM ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகும் என்றும் 01.10.2025 முதல் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பயன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.520 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.9,005ஆகவும், 1 சவரன் ரூ.72,040ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.8,940ஆகவும், 1 சவரன் ரூ.520 சரிந்து, ரூ.71,520ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்படுகிறது. SHARE IT.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி குறைந்தபட்சமாக மாதம் ரூ.1,300, அதிகபட்சமாக ரூ.4,600 கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு தற்போது 14% அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16%, 146% பெறுவோருக்கு கூடுதலாக 48% வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சமாக இனி ரூ.2,500, அதிகபட்சமாக ரூ.21,679 கிடைக்கும். இதனால் 90,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பலனடைவர்.
டெல்லியில் நடைபெற்ற DC அணிக்கு எதிரான மேட்ச்சில், RCB வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று ஒன்றை படைத்துள்ளது. IPL-ல் வெளி கிரவுண்டில் தொடர்ச்சியாக 6 மேட்ச்களை வென்ற ஒரே அணி RCB தான். கொல்கத்தா, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகர், டெல்லி மைதானங்களில் வரிசையாக RCB வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் நேற்றைய வெற்றியுடன் RCB, 10 மேட்சில் 7 வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. குறைந்தபட்சமாக 8 ஆம் தேர்ச்சி பெற்று, 18-47 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?
இப்பவே வெயில் இப்படி இருக்கே, கத்திரி வெயில் தொடங்கினால் அவ்ளோதான். மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலம் மே 28 வரை நீடிக்கிறது. இதனால், மே 1 முதலே பல இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலை வீச வாய்ப்பில்லை என்றாலும், வறண்ட காற்று மற்றும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.
Sorry, no posts matched your criteria.