India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் MPக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், INDIA கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மசோதாவை எதிர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கொறடா தலைமையில் ஆலோசனை நடக்கிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்துள்ளது. நேற்று ₹57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,200க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹10 உயர்ந்து ₹7,150ஆக உள்ளது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ₹100க்கு விற்கப்படுகிறது.
இசை இறைவன், ஆண்டாளின் மகன் இளையராஜாவை அவமதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்புக் கோர வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், இளையராஜாவை கோயில் மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார். தமிழின முன்னோர் ஆண்டாளை வழிபாடு செய்வதை தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பெட்ரோல், டீசல் கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிவிட்டனர். இந்நிலையில், 2024இல் இந்தியாவில் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் கார்களை இந்த லிஸ்ட்டில் காணலாம். * மஹிந்திரா XUV400,*டாடா பஞ்ச் EV,*BYD சீல்,* BMW i5, * Mercedes-Benz EQA மற்றும் EQB ஃபேஸ்லிஃப்ட், * மினி கன்ட்ரிமேன் EV, * Tata Curvv EV, * Kia EV9, * MG Windsor EV, *BYD eMAX 7. இதில் உங்கள் சாய்ஸ் எது?
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு எதிராகப் பேச அனுமதி கோரி எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தாக்கல் செய்யவுள்ளார். ஆரம்பம் முதலே இம் மசோதாவை காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (டிச. 17) முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன. வயது வரம்பு 20 முதல் 28 வரை. இதில், சென்னை கோட்டத்தில் மட்டும் 340 காலியிடங்கள் உள்ளன. மேலும் தகவல்களுக்கு <
கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் நிதியமைச்சராகவும் உள்ள அவர், வருடாந்திர நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன், ட்ரூடோ முடிவு மீதான அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார். கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்கள் காசோலை வழங்கும் கொள்கை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க பெரம்பூர் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது முனையமாக எழும்பூரும் மூன்றாவது முனையமாக தாம்பரமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, நான்காவது முனையமாக பெரம்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ₹428 கோடியில் இங்கு ரயில் முனையம் அமையவுள்ளது.
நவம்பர் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 331% அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நவம்பரில் தங்கத்தின் இறக்குமதி ₹1.25 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் ₹29,000 கோடியாக இருந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தமாக ₹4.10 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 49% அதிகமாகும்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடப்பதால், இது ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும். அதனால், இப்போதே தேர்தல் பணிகளை DMK முடுக்கியுள்ளது. அதேநேரம், இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வேண்டும் என முன்னணி தலைவர்கள் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தொகுதியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
Sorry, no posts matched your criteria.