India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், ரசிகர்கள் கொண்டாட எண்ணற்ற தருணங்களை வழங்கியிருப்பதாகவும், எல்லைகளை கடந்து பெரிய கனவுகளை காண பல லட்சம் பேருக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், புதிய பயணத்தில் மகத்தான வெற்றியை பெறவும் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி, வரும் 21, 22ஆம் தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்ல உள்ளார். அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றார்.
DMK வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என BJP மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்தால், எலிகள் அங்கிருந்து குதித்து தப்பித்துக் கொள்ளும் என்ற அவர், அதற்காக திருமாவளவனையும், வேல்முருகனையும் எலிகள் என்று தான் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி இருந்த இடம் தெரியாமல் போகும் எனவும், பாஜக அணியே ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு, AUS கேப்டன் பேட் கம்மின்ஸ் நினைவுப் பரிசை வழங்கியுள்ளார். AUS வீரர்கள் கையெழுத்து இட்ட ஜெர்ஸியை வழங்கி பிரியாவிடை அளித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அஸ்வினின் சுழலை இனி பார்க்க முடியாது என்றாலும், IPL உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுவார். பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்தால், தாங்களும் அதேபோல் அதிக வரியை விதிப்போம் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவும், பிரேசிலும் தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா அப்படி செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வர்த்தகம் என்பது நியாயமான முறையில் நடைபெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாத விவகாரம் குறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். தான் அடிப்படையில் ஒரு இறை நம்பிக்கையாளன் எனவும், இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்தது உண்மை என்றால், மனிதர்களிடம் கடவுள் பாகுபாடு பார்க்கக்கூடாது, அப்படி பார்ப்பவர் கடவுளாகவே இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதை எந்த மதம் சொன்னாலும் தவறுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச PF ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர் பசவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, வாழ்வாதார செலவீனம் அதிகரித்திருப்பதால், அந்த ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தன்னை பதவிவிலக சொன்ன காங்., தலைவர் கார்கேவுக்கு அமித்ஷா பதிலளித்துள்ளார். பதவி விலக நான் தயார். ஆனால், நான் பதவி விலகுவதால், கார்கேவின் பிரச்னை தீரப் போவதில்லை. ஏனெனில், இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி இருக்கையில் தான் அமரப் போகிறார் என்ற அமித்ஷா, தன்னுடைய ராஜினாமா எதையும் மாற்றிவிடாது என்றும் குறிப்பிட்டார்.
2025 ஆஸ்கர் விருது நாமினேஷனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட லபாடா லேடீஸ் தேர்வு பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து சார்பில் நாமினேட் செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது. UK, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான, சந்தியா சூரி இயக்கிய இந்த படம் 2024 கேன்ஸில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
X தளத்தில் ஹேஷ்டேக் பயன்படுத்துவதை பயனர்கள் தவிர்க்க வேண்டும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். இது அசிங்கமாக இருப்பதாகவும், Xக்கு இனி அந்த அமைப்பு தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். X தள பதிவுகளில் அது சார்ந்த ஹேஷ்டேக்குகளை இடுவதும், அது ட்ரெண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மேலும், இந்த ஹேஷ்டேக்குகளை சேர்ப்பதன் மூலம் பதிவுகளை எளிதாகத் தேட முடியும்.
Sorry, no posts matched your criteria.