India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் பயங்கர ஷாக் ஆனதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து தாங்கள் யோசிக்கவில்லை எனவும், கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் உடலை பேணுவதற்கு கஷ்டப்பட்டதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நாடெங்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி பேசுகையில், மது பிரியர்களின் கோரிக்கை வேறாக உள்ளது. இதுபற்றி X-ல் IRAS அதிகாரி ஒருவர் நகைச்சுவையாக பகிர்ந்துள்ள பதிவில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும். ஒரு ஒயின் பாட்டில் கர்நாடகாவில் ரூ.920க்கு விற்கிறது. ஆனால், கோவாவில் அதன் விலை ரூ.320 மட்டுமே. மது விலைகளையும் ஒரே நாடு ஒரே விலை என மாற்றினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது. உங்க கருத்து?
இரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசிய விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மும்பையில் பேசிய அவர், “அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு பாஜகவினரின் உண்மையான முகத்தையும், ஆணவத்தையும் காட்டுகிறது. அவர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.
அஸ்வினை விரைவில் மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக அவர் தனது X பதிவில், “நம்பமுடியாத நினைவுகளை அளித்த அஸ்வினுக்கு நன்றி. இத்தனை வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் உலகம் நிச்சயமாக ஒரு சாம்பியன் பந்து வீச்சாளரை மிஸ் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
அம்பேத்கர் கடவுள் போன்றவர். அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்துவிட்டார். ஆகவே, அவர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமித்ஷாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இசை & நடிப்பு என 2 துறையிலும் பயணிக்கும் G.V.பிரகாஷ்குமார், ‘சூரரைப்போற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் ‘SK25’ படத்திலும் இணைந்துள்ளார். இது, இவர் இசையமைக்கும் 100ஆவது படமாகும். இது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது ஒரு ஆழமான பயணம். இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்த நடிகர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மசோதாவை ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்க லோக் சபாவின் 21 பேர், ராஜ்ய சபாவின் 10 பேர் என 31 MPக்கள் கொண்ட கூட்டுக்குழு (JPC) அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவை சேர்ந்த செல்வகணபதி, வில்சன் இருவரும் இடம்பெற்றுள்ளனர். தவிர, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, உள்ளிட்டோரும் JPC-இல் இடம்பெற்றுள்ளனர்.
மும்பையில் நடந்த படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று மாலை 3.55 மணிக்கு மும்பை அருகே புசார் தீவில் கடற்படை படகு இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் படகில் மோதியது. இதுவரை 101 பேர் மீட்கப்பட்டதாகவும் 13 பேர் உயிரிழந்ததாகவும் CM தெரிவித்தார். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதை, அவர் மறைந்தபின்னும் அம்பேத்கருக்கு காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. மாறாக, தங்களுக்கே காங்கிரஸ் தலைவர்கள் அந்த விருதை வழங்கிக் கொண்டனர் என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். 1955-ல் நேரு, 1971-ல் இந்திரா காந்தி ஆகியோர் தங்களுக்கே விருது கொடுத்துக் கொண்டனர். 1990களில் தான் அம்பேத்கருக்கு ‘பாரத் ரத்னா’ வழங்கப்பட்டது என அவர் நினைவூட்டினார்.
Sorry, no posts matched your criteria.