India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் 2022ஆம் ஆண்டில் அதிக சாலை விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 2022ஆம் ஆண்டில் நாட்டில் 4,61,312 விபத்துகள் நேரிட்டு இருப்பதாகவும், இதில் தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சந்திரமுகி பட அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், சந்திரமுகி படத்தில் எனது முதல் காட்சி ரஜினி சாருடன் இருந்தது. அப்போது அவர் அவ்வளவு பெரிய நடிகர்னு எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு ப்ளஸ் ஆக மாறியது. ஒருவேளை எனக்கு தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஸ்டார் வேல்யு தெரியாதது எனக்கு உதவியாக இருந்தது எனக் கூறினார்.
3 ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி வந்த நளினி உன்னாகர் எடுத்துள்ள முடிவு, யூடியூபர்களாக வர நினைப்போருக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இதுவரை 250 வீடியோக்களை பதிவிட்ட போதிலும், அவர் ரீச் ஆகவில்லை. இதனால் தனது யூடியூப் சேனலை நிரந்தரமாக மூட முடிவு செய்து, வீடியோ உபகரணங்களை விற்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், யூடியூபில் வெற்றி பெற திறமையை விட லக்கும் அவசியம் எனவும் கூறியுள்ளார்.
இன்றோடு கிரிக்கெட்டிற்கு Good bye சொன்ன அஸ்வினுக்கு ₹132 கோடி சொத்து மதிப்பு உள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் போது, BCCI அவருக்கு ஆண்டுதோறும் ₹10 கோடி வழங்கி வந்துள்ளது. IPLல் RRக்காக விளையாடிய ஒவ்வொரு சீசனுக்கும் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் CSK அணி அவரை ₹9.75 கோடிக்கு எடுத்துள்ளது. இதுபோக, Myntra, Oppo, Coca cola நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக விமான நிலையத்தில் இருந்த புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, விஜய்யின் ப்ரைவெட் ஃபோட்டோவை வெளியிட்டது யார் என கேள்வியெழுப்பினார். மேலும், மாநில உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற ஃபோட்டோக்களை திமுக ஐடி விங்குக்கு அனுப்புவதுதான் வேலையா எனவும் அவர் வினவியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிட மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் எனவும், இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் கவலைப்பட வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.
➤மேஷம் – செலவு
➤ரிஷபம் – ஆதாயம்
➤மிதுனம் – வரவு
➤கடகம் – தடங்கல்
➤சிம்மம் – நன்மை
➤கன்னி – சுகம்
➤துலாம் – பெருமை
➤விருச்சிகம் – நலம்
➤தனுசு – கீர்த்தி ➤மகரம் – உழைப்பு
➤கும்பம் – உதவி ➤மீனம் – அலைச்சல்
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அம்பேத்கர் என சொல்வது ஃபேஷனாகிவிட்டது என நாடாளுமன்றத்திலேயே அமித் ஷா பேசியது கண்டனத்துக்குரியது. அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பல ஏழைத்தாயின் மகன்களை அதிகாரத்தை அடையச் செய்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பலரும் BGT தொடரின் போது தங்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் சுவாரஸ்ய தகவல் கவனம் ஈர்க்கிறது. இன்று ஓய்வு அறிவித்த அஸ்வின் முதல் கேப்டன் கூல் தோனி, கும்ப்ளே, டிராவிட், கங்குலி, லக்ஷ்மண், சேவாக் உள்ளிட்டோர் BGT தொடரில் தான் தங்கள் கடைசி டெஸ்ட் ஆட்டத்தை விளையாடி உள்ளதாக ஒரு தகவல் அதிகம் பகிரப்படுகிறது. அடுத்து யாராக இருக்கும்? நீங்களே சொல்லுங்க.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான எஸ்.ஏ. பாஷா, இரு தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத் இந்து சபா, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.