India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, 2 நாள்கள் பயணமாக ஈரோடு செல்லும் அவர், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்று திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கியும் வைக்கிறார். மேலும் ₹284 கோடி மதிப்பில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகராமல் வடக்கு நோக்கி செல்வதால் மழை படிப்படியாக குறையும் என்று தெரிகிறது.
இயக்குனர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் கொண்டாடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய SK,” தீபாவளியன்று வெளியாகும் படங்களில் சோகமான முடிவுகள் இருந்தால் படங்கள் ஓடாது என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. அமரனை பொறுத்தவரை, இதனால் நிறைய மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தீபாவளியன்று வெளியான பாலா சாரின் ‘பிதாமகன்’ அதை அனைத்தையும் உடைத்து வசூல் சாதனை படைத்தது” என்றார்.
நடப்பாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் ₹75,000 கோடி அளவிற்கு நிறுவன முதலீடுகள் குவிந்துள்ளன. இந்தியாவில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளுக்கான தேவை தொடர்ந்து வலுவடைவதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல். இந்தியா தெரிவித்துள்ளது. அதன் தகவலின்படி, கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் முதலீடு ₹49,700 கோடியாக இருந்துள்ளது. இது தற்போது 51% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் வங்கி அதிகாரிகள், இது பொய்யான தகவல் என்று மறுத்துள்ளனர். அரசு பொது விடுமுறைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2024க்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை, சென்னையை பூர்வீகமாக கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) என்பவர் வென்றுள்ளார். நியூஜெர்சி மாகாணத்தில் ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், USAவின் 25 மாகாணங்களை சேர்ந்த 47 இந்திய வம்சாவளி பெண்கள் கலந்துகொண்டனர். இதில் மிஸ் டீன் பட்டத்தை அர்ஷிதா என்பவரும், மணமானவர்களுக்கான அழகி பட்டத்தை சன்ஸ்கிருதி என்பவரும் வென்றனர்.
*ஒரு டி ஸ்பூன் உப்பை, ரோஸ் வாட்டருடன் கலந்துகொள்ள வேண்டும்.
*அதனை முகத்தில் அப்ளை செய்தபின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
*இப்படி வாரம் ஒரு முறை செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
*உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தபின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
*இதுவும் முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாவதைத் தடுக்க உதவும்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் 4 நாள்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காலையில் ஏற்படும் களைப்பை தடுக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க.
*காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம்.
*நாள்தோறும் முட்டை (2-3) சாப்பிடலாம்.
*புரதம் நிறைந்த யோகர்ட் (கிரேக்க தயிர்)
*கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ள பழம்
*பிடித்த வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
*இலை பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள்
*சியா விதை (நீர் அல்லது தயிரில் கலந்து)
அலங்காநல்லூரில் உள்ள கருணாநிதி ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, தமிழக அரசு ₹8 லட்சம் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக R.B.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நடந்த ADMK கூட்டத்தில் பேசிய அவர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல, தமிழக CMஆக எடப்பாடி பழனிசாமி வருவார் என்றார். மேலும், கரண்ட் பில் கூட கட்ட முடியாத திமுக அரசு மக்களை எப்படி காப்பாற்றும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.