India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று நடந்த வணங்கான் Audio வெளியீட்டில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அதில் பேசியவர், அருண்விஜய் எனக்கு சீனியர். அவர் விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்வதைதான் அவரோட வெற்றியா பார்க்கிறேன் என்றார். முன்பு SK – அருண்விஜய் இடையே உரசல் இருந்ததாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அருண் விஜய்யின் பட விழாவில் SK கலந்துகொண்டது சச்சரவை முடித்துவைத்துள்ளது.
பாஜக எம்.பி.க்களை தாக்கியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் ராகுல் மீது 109, 115, 117, 125, 131, 351 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தெரிவித்தார். இதில் 109-வது பிரிவு என்பது கொலை முயற்சி வழக்காகும். முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடந்த மோதலில் இரு பாஜக எம்.பிக்கள் காயமடைந்தனர்.
2025-ல் ஆப்பிளின் ‘iPhone 16’ லாஞ்சில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறதாம். ஐபோனின் Most Affordable Range சிரீஸான 5E மாடலின் அடுத்த வெர்சன் 16e என்ற பெயரில் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. iPhone 14 மாடலின் 6.1 XDR டிஸ்பிளே, 60 Hz Refresh Rate உடன், 5E போனின் அடையாளமான சிங்கிள் Back Cam- 48MP ஆகவும், Front Cam- 12MP ஆகவும் அப்கிரேட் செய்யப்படலாம். இது ரூ.42,000-க்கு அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை மொத்தமாக நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் மாதம் ₹3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுபவர்களில், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ₹3,000 – ₹9,000 வழங்கப்படும்.
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. குகேஷை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, குகேஷுன் வெற்றி இந்திய இளைஞர்களுக்கு புது உத்வேகத்தை அளித்திருப்பதாகவும், விளையாட்டில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக, தமிழக அரசின் சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு, ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் திங்கட்கிழமையுடன் (டிச.23) தேர்வுகள் முடிவடைகின்றன. தொடர்ந்து, 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது. ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
41 வயதிலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் த்ரிஷா, அண்மைக் காலமாக அடிக்கடி டிரெண்டிங்கில் உலா வருகிறார். கீர்த்தி சுரேஷின் கல்யாணம், விஜய் உடன் விமானத்தில் பயணம், அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங் ஸ்பாட் எனக் கவனத்தை ஈர்த்த சவுத் குயின், காஞ்சிபுரம் பட்டுச் சேலையில், ‘ஃபேஷன் வரும் போகும் ஆனால் பாரம்பரியமே நிரந்தரமானது’ என்ற பதிவுக்கு ❤️❤️ பறக்குது.. உங்க கமெண்ட் என்ன…?
ஸ்பெயினில் கடந்த 2023 அக்டோபரில் காணாமல் போன ஒருவர் கொலை செய்யப்பட்டதை, Google Street View காட்டிக் கொடுத்துள்ளது. கொலை செய்து சடலத்தை காரில் ஏற்றிக் கொண்டிருந்த தருணத்தில், அந்த வழியாக வந்த கூகுள் வாகனம் அதை படம் பிடித்துள்ளது. சிதைந்த உடல் பாகங்கள், அருகில் இருந்த மயானத்தில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்டவரின் இணையர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
‘விடுதலை’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு TN அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதித்துள்ளது. முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், 2ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது.
IND vs PAK போட்டிகள் 2027 வரை, இரு நாடுகளுக்கும் சம்பந்தமில்லாத பொதுவான மைதானத்தில் நடைபெறும் என ICC அறிவித்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 மகளிர் உலகக்கோப்பை, 2026 T20 உலகக்கோப்பை மற்றும் மற்ற ICC தொடர்களிலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.