India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில், முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும், 7 ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி கூடும் எனவும் கூறப்படுகிறது.
மந்திரம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. SHARE IT.
ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி, சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி, பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பிற்பகல் 2.40 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடும் இந்தியாவில் உலகின் மிக உயரமான விநாயகர் சிலை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தாய்லாந்தின் குலோங் குவானில் தான் உலகின் மிக உயரமான விநாயகர் சிலை உள்ளது. 39 மீட்டர் உயரம், 100 டன் எடை வெண்கலத்தால் ஆன இந்தச் சிலை 4 கைகளை கொண்டுள்ளது. அதேநேரம், ஆசிய கண்டத்தில் ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய விநாயகர் சிலை கோவை, புளியங்குடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கூலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஸ்ருதி ஹாசனை கிளாமரான நடிகை என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். ஆனால் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹோம்லியாக தான் நடித்திருப்பார். இப்போது தனது ரசிகர்களுக்காக கிளாமரான போட்டோஷூட் ஒன்றை ஸ்ருதி நடத்தியுள்ளார். அதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து இளசுகளின் லைக்குகளை அள்ளி வருகிறார். மேலே இருக்கும் விதவிதமான அவரது போட்டோக்களை நீங்களும் கண்டு மகிழுங்கள்..
2 மாநாட்டிலேயே விஜய்யின் சாயம் வெளுத்துவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். ‘நரியின் வேசம் கலைந்து போச்சு.. டும் டும் டும்.. ராஜா வேசம் கலைந்து போச்சு டும் டும் டும்..’ என்பது போல் அனைத்து தரப்பு விமர்சனங்களை விஜய் தாங்கி சென்று கொண்டிருக்கிறார் என கிண்டலாக தெரிவித்தார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே, காலி பெருங்காய டப்பா போல் ஆகிவிடுவார் எனவும் சேகர்பாபு கூறினார்.
கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது DCM டிகே சிவக்குமார் RSS பாடலை பாடினார். பாஜகவை விமர்சிக்கும் நோக்கில் அந்த பாடலை பாடியதாக சிவக்குமார் கூறினாலும், காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் இதனை வைத்து அரசியல் செய்ய முயல்வதாக கூறிய அவர், தனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.