India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகுல் காந்தி மீது நாகலாந்து பெண் எம்.பி. பாங்னோன் கொன்யாக் பரபரப்பு புகார் அளித்தது தொடர்பாக வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். பழங்குடியின பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தனக்கு மிக அருகே ராகுல் நின்றது அசெளகர்யமாக இருந்ததாக பாங்னோன் கொன்யாக் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
WI மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், IND அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 77 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய WI அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000-ஐ தமிழக அரசு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகையை வங்கியில் செலுத்த அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், சிலரது அக்கவுண்ட்டுகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால், பொங்கல் பரிசை வங்கியே எடுத்துவிடும் என்பதை அதிகாரிகள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். இதையடுத்து, ரேஷன் கடைகளிலேயே பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா கூறிய வார்த்தைகள், அம்பேத்கரின் கண்ணியத்தை வெகுவாக காயப்படுத்தி உள்ளதாக மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தான் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதை செய்யத் தவறும் பட்சத்தில், பாபா சாகேப்பிற்கு காங்கிரஸ் செய்ததை, மக்கள் எப்படி மறக்காமல் உள்ளனரோ, அதேநிலை தான் பாஜகவிற்கும் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அவதூறு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசின் தூய்மை பணியாளர் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கஞ்சா வழக்கில் வாரண்ட் அடிப்படையில் கைதான அவர், தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1) ரிஷபம்: திருமண ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்த சனி பகவான் மார்ச் மாதத்துடன் 7ம் இடத்திலிருந்து விலகுவதால், நிச்சயம் டும்டும்டும்தான். 2) மிதுனம்: குரு வக்கிரப் பார்வையால் பிப்.7வரை திருமணம் தள்ளிப்போகும். அதன்பிறகு உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி வரன் அமையும். 3) கடகம்: உங்களுக்கு மார்ச்சுடன் வக்கிர சனி முடிவதால் திருமண யோகமும், வீடுமனை யோகமும் சேர்ந்து வரப்போகிறது. அப்புறம் என்ன..ஜாலிதானே
மோசடிக்காரர்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் போது, நாமும் அப்டேட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுகிறோம் எனக்கூறி தனிப்பட்ட தகவல்களை பெறுவது ஏமாற்றுகாரர்களின் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. இதை உணர்ந்த TRAI, தனிப்பட்ட பயனர்களுக்கு நாங்கள் போன் போட மாட்டோம் எனவும், உஷாராக இருக்கவும் எச்சரித்துள்ளது. உங்களுக்கும் இதுபோன்று போன் வந்துள்ளதா.
விடுதலை 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாகிறது. இந்நிலையில், படத்தை சட்டவிரோதமாக Onlineல் வெளியிடப்படுவதை தடுக்குமாறு தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு கோர்ட் ஆணையிட்டுள்ளது.
கேரள மருத்துவ கழிவுகள் விவகாரத்தில் இபிஎஸ்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாக இருந்ததாகவும், திமுக ஆட்சியில் அவை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக் கூட தெம்பில்லாத முதல்வர் இருப்பதாக இபிஎஸ் விமர்சித்து இருந்தார்.
‘அமரன்’ திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸாக வந்து பலரது இதயங்களை கொள்ளையடித்த சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று நடந்த 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சாய் பல்லவிக்கு ‘அமரன்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படத்தில், அவரது மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார்.
Sorry, no posts matched your criteria.