India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்தில் பாலாஜி (VSB) மீண்டும் அமைச்சராகத் தொடர்வதால் சாட்சியங்கள் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பது குறித்து பார்ப்பதாக SC கூறியுள்ளது. ஜாமினுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உள்துறை செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அதிரடி உத்தரவிட்டனர். இது VSBக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை நீதிமன்ற வாசலிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பழைய கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டியை கோர்ட்டுக்குள் பதுங்கியிருந்த 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உடனடியாக அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழத்தில் சட்ட ஒழுங்கு கேளிக் கூத்தாகியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் EPS கண்டனம் தெரிவித்துள்ளார்.
ICC தொடர்களில் மட்டுமே இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கிறது. ஆனால், இப்போட்டிகள் வருடத்திற்கு 1 அல்லது 2 முறை தான் நடைபெறுகிறது. இச்சூழலில் இரு அணிகளுடன் மற்றொரு ஆசிய அணி கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடர் நடத்த ICC சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், தொடர் வேறு நாட்டில் நடக்க வேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனையுடன், 3வதாக எந்த டீம் இருந்தா நல்ல இருக்கும்?
ஹரியானாவின் அடையாளம், 4 முறை CM என்ற பெருமையை பெற்ற <<14931808>>சவுதாலா<<>>, டெல்லி திகார் சிறையில் மூத்த கைதி என்ற வரலாற்றுக்கும் ஆளானவர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய சவுதாலாவுக்கு, 2013 ஆம் ஆண்டு சிபிஐ கோர்ட் 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்த அவர் 2021 ஜூலையில் விடுதலையானார். இவர் Ex Dy PM சவுத்ரி தேவிலாலின் மகன் ஆவார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் EPS ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவிய தென்னரசுவையே போட்டியிட வைக்கலாமா, அல்லது முன்னணி நிர்வாகிகளான ஆற்றல் அசோக் குமார், வீரகுமார் ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வாத்தியார் கம்யூனிசம் பாதையைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன, மக்கள் படையின் கதை? என விரிகிறது விடுதலை 2. வெற்றிமாறன் பல கருத்துகளைக் கூற, அதை விஜய் சேதுபதி அழுத்தமாக காட்டியுள்ளார். கென் கருணாஸ் நடிப்பு சிறப்பு. பிற நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள். இளையராஜா இசை படத்தின் பலம். சூரி பெரிதாக தெரியவில்லை. வேகமான திரைக்கதையில் கம்யூனிச வசனமும், படத்தின் நீளமும் தோய்வு. Rating: 3/5
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார். ’இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஏழு முறை MLAவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி கூடிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. வெள்ள பாதிப்பு, மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அவை நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு நிமிடத்திற்கு ₹2.5 லட்சம் என கூட்டம் நடந்த 20 நாட்களுக்கு ₹150 கோடி விரயமானதாகக் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தில் முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்த ஆளுநர், இந்த முறையாவது அரசின் உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தனக்கு கணவராக வருபவரின் தகுதிகள் குறித்து நடிகை ரஷ்மிகா பகிர்ந்துள்ளார். அவர், “ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்னிடம் இருக்கிறது. என்னை போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.