India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாணுமாலய சாமி கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி இணையதளம் ஹிந்தியில் மாற்றப்பட்டதை விமர்சித்த அவர், ஹிந்தி உள்ளிட்ட எதையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்து விட முடியாது என்றார். ஓட்டுமொத்த நாட்டு மக்கள் பங்களிப்போடு செயல்படும் அந்நிறுவனத்தில், மத்திய அரசு குறுகிய எண்ணத்தில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியம் என டிராவிட் தெரிவித்துள்ளார். முதலில் வரும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கும் போது பின் வரிசை வீரர்களுக்கு அழுத்தம் குறையும் என்ற அவர், இந்த முறை ஆஸி.யில் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார். தானும், புஜாராவும் இல்லாத இடத்தை கில் கண்டிப்பாக ஈடுசெய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
உடலுக்கு முக்கிய சக்தியான புரதம், அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. தசைகள், தோல், முடி போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது. உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க, இறைச்சி, முட்டை, பால், மீன், பருப்புகள், பருப்பு வகைகள் மற்றும் கோதுமையை உள்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை பார்வையற்றோர் T20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய பார்வையற்ற கிரிக்கெட் அணி, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழில் எல்.ஐ.சி இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் ஹிந்தியில் மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 104
▶குறள்:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
▶பொருள்: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
புரோ கபடி லீக் தொடரில் புனேரி பால்டன் – உ.பி யோதாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்டம் 29-29 என்ற புள்ளிகள் கணக்கில் டிராவில் முடிந்தது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை மற்றும் பாட்னா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அதிமுக நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதிமுகவை தனிமைப்படுத்தும் வேலைகளை அக்கட்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளதாகவும், அதற்காக எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
▶நவம்பர் – 20 ▶கார்த்திகை – 05 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 PM
▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: கேட்டை, அனுஷம்
Sorry, no posts matched your criteria.