India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பிட்காயின் வாலெட்டில் சேர்ந்த தொகையில், ரூ.6600 கோடி காணாமல் போனது. அதை 2 போலீஸ் அதிகாரிகளே மற்றொரு வாலெட்டுக்கு மாற்றிக் கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. 2 அடுக்குகளாக நடந்த இந்த மோசடியில், முதல் அடுக்கில் அமித், அடுத்து கவுரவ் மேத்தா, NCP தலைவர் சுப்ரியா சுலே, நானா படோல் இருந்ததாகவும், பணம் எங்கிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் கூறப்படுகிறது.
ஜார்கண்ட் தனி மாநிலமாக உதயமானது முதல் அந்த மாநில அரசியலில் தனி செல்வாக்குடன் JMM திகழ்கிறது. கடந்த 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற JMM, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. ஆனால் இந்த முறை நடந்தத் தேர்தலில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் ஜார்கண்டில் JMM தனது செல்வாக்கை இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2014, 2019 தேர்தலில் ஆட்சியமைக்கும் கூட்டணியில் அங்கம் வகித்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இந்தத் தேர்தலில் வலுவிழக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே பிரித்துச் சென்றது தாக்கரே குடும்பத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே மீண்டும் சிவ சேனாவை மீட்டெடுப்பாரா? தாக்கரே குடும்பத்தின் கை ஓங்குமா? காலம் பதில் சொல்லும்.
பெரும்பாலான கருத்து கணிப்பு நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஜன்மத் நிறுவனம் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 130 முதல் 145 வரை தொகுதிகளும், காங். கூட்டணிக்கு 125 முதல் 140 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள்.
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு PMARQ நடத்திய EXIT POLLS விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 37 முதல் 47 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 31 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகள் 1 முதல் 6 தாெகுதிகளில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி மெஜாரிட்டி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், என்சிபி கட்சியின் தலைவர் சரத்பவாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அவருக்கு இப்போது 84 வயதாகிறது. அதேபோல, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT), இந்த தேர்தலில் வெல்லவில்லை எனில், சிவசேனா தொண்டர்கள் முழுமையாக ஷிண்டே பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.
ஜார்கண்ட் தேர்தலுக்கு பின்பு AXIS MY INDIA நடத்திய EXIT POLL கணிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஆளும் ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 53இல் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 3இல் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து CHANAKYA STRATEGIES நடத்திய வாக்குக் கணிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில், பாஜக கூட்டணி 45 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 38 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து CHANAKYA STRATEGIES நடத்திய EXIT POLLS விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாஜக, சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் கட்சி கூட்டணி 130 முதல் 138 தொகுதிகளில் வெற்றி பெறும். பிற கட்சிகள் 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பை ஏபிபி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக தலைமையிலான கூட்டணி 45% வாக்குகளுக்கு மேல் பெற்று 42 முதல் 47 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 38 சதவீத வாக்குகளை பெற்று 25 முதல் 30 தொகுதிகளை வெல்லக்கூடும். மற்ற கட்சிகள் 17% வாக்குகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.