News November 21, 2024

உக்ரைன் மீது அணுகுண்டு வீசப்பட்டால் என்ன நடக்கும்?

image

போரில் உக்ரைனை பணிய வைப்பதற்கு ரஷ்யா <<14665025>>அணுகுண்டு<<>> வீசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் முன்கூட்டியே கணித்துள்ளனர். அதை காணலாம். *லட்சக்கணக்கில் உயிரிழப்பு* மரம், செடி கொடிகள் கருகி பல ஆண்டுகள் வரை முளைக்காது *கதிர்வீச்சால் எதிர்காலத்தில் பிறக்கும் சந்ததியினரும் பாதிக்கப்படுவர் *காற்று கிழக்கு பக்கமாக வீசினால் கதிர்வீச்சு ரஷ்யா பக்கம் பரவி அங்கும் அழிவு ஏற்படும்.

News November 20, 2024

எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா? மா.சு

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியா, எரிச்சல்சாமியா என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்பி வருவதாக சாடியுள்ளார்.

News November 20, 2024

தனுஷை புறக்கணித்த நயன்தாரா

image

தனது ஆவணப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அதில் படக் காட்சிகளை சேர்க்க ஒப்புதல் அளித்த பட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ், தெலுங்கு, மலையாள தயாரிப்பாளர்கள் பெயர்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளார். “நானும் ரவுடிதான்” பட காட்சியை சேர்க்க ஒப்புதல் தராத அப்படத் தயாரிப்பாளரான தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.

News November 20, 2024

மக்கள் வாழ இதுதான் வழி: சீமான்

image

திமுக ஆட்சியை அகற்றுவதே, மக்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தஞ்சை, ஓசூர் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

எந்த நேரத்திலும் அணுகுண்டு.. அச்சத்தில் உக்ரைன் மக்கள்

image

நெடுந்தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்ததை அடுத்து, ரஷ்ய படைகளுக்கு அணுஆயுத தாக்குதல் நடத்துவது தொடர்பான அதிகாரத்தை புதின் அளித்துள்ளார். 2ஆம் உலகப் பாேரின்போது அணுகுண்டு வீசப்பட்டதால் ஜப்பான் பேரழிவை சந்தித்தது. அதுபோல ரஷ்யா அணுகுண்டு வீசும்பட்சத்தில் உக்ரைனில் பேரழிவும், லட்சக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்படும். இதனால் உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

News November 20, 2024

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இனி பெண்களுக்கு முன்னுரிமை

image

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 2ஆம் பகுதியில் 100% பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 8 ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் பெண்கள் பெயரில் அல்லது பெண், ஆண் கூட்டுப் பெயரில் மட்டுமே வீட்டின் உரிமை பதிவிட வேண்டும். இனி ஆண் பெயரில் தனித்து உரிமை பதிவிடக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

News November 20, 2024

கம்பீர் நீண்ட காலம் கோச்சாக இருக்கமாட்டார்: சைமன் டவுல்

image

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். “கிரேக் சேப்பலை விட குறைவான காலமே பயிற்சியாளராக இருப்பார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட BGT தொடரில் நல்ல முடிவுகள் வந்தால் பரவாயில்லை. இந்தியா 1-4 அல்லது 0-5 என தோல்வியடைந்தால் அவர் பயிற்சியாளராக தொடர்வது சந்தேகமே” என்றார்.

News November 20, 2024

ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடியை தோண்டும் CBI

image

2018-இல் நடந்த ரூ.6,600 கோடி பிட்காயின் மோசடி மீது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது CBI. முதன்மை குற்றவாளிகளில் அமித் இறந்துவிட, அஜய் வெளிநாட்டில் மறைந்து வாழ்கிறார். இந்த இருவர் மீதும் சிபிஐ FIR பதிந்துள்ளது. என்சிபி தலைவர் சுப்ரியா சுலே பேசுவதாக ஒரு ஆடியோ வெளியான நிலையில், SC உத்தரவின்படி, CBI விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், சுப்ரியா சுலே குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்.

News November 20, 2024

ஆசிரியை ரமணிக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

தஞ்சையில் பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்த அவர், ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அவரது இறப்பு பள்ளிக்கல்வித்துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2024

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே: அன்புமணி

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சையில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது, ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானார்கள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!