India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி வங்காளதேச மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ODI இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய BAN 252/4 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாட துவங்கிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 98 ரன்னில் சுருண்டது. இதன் மூலம்154 ரன் வித்தியாசத்தில் BAN வெற்றி பெற்றது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா (ஈரான் ஆதரவு) இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “இந்த முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது. இந்த முன்னேற்றம் பரந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் PM, US அதிபர் தனித்தனி உரையில் அறிவித்திருந்தனர்.
ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகள் நினைவாக பல இடங்களில் இலங்கைத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும் எனக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தையொட்டி மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக, இந்த ஆண்டு சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே <<14724305>>கார் மோதி<<>> பலியான 5 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற செய்தி குறித்து கேள்விப்பட்டு தாம் பெரும் துயரமும் வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். 5 பேர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் CM நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
‘பாகுபலி’ படத்தில் அனுஷ்காவின் முறை மாமனாக ‘குமார வர்மன்’ கேரக்டரில் நடித்தவர் நடிகர் ‘சுப்பராஜு’. 47 வயதாகும் அவருக்கு சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது மனைவியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் M.குமரன், போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
EVM இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் SC, ST, OBC பிரிவு மக்கள் வாக்குகள் வீணாவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய பாஜக எம்பி சம்பித் பத்ரா, கார்கேயும், காங்கிரஸ் கட்சியினரும் EVM இயந்திரத்தில் கூட வாக்களிக்க தெரியாத மக்களாக SC, ST, OBC பிரிவினரை நினைப்பதாக சாடினார். இது அந்தப் பிரிவு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
4 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை அரசியல் சதி என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சாடியுள்ளார். தேசிய அணி தேர்வின்போது ஊக்க மருந்து பரிசோதனைக்கு சிறுநீர் அளிக்க மறுத்ததாக கூறி NADA தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய புனியா, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை ஆதரித்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது என சாடியுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று தந்தவர் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.
1) பழைய கூகுள் மேப்பை பயன்படுத்த வேண்டாம். புதிய வெர்ஷன் கூகுள் மேப்பை டவுன்லோடு செய்யுங்கள். அடிக்கடி கூகுள் மேப்பை புதிதாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். 2) கூகுள் மேப் வேகமான வழி (FASTEST ROUTE) என மாற்று வழியை காண்பித்தால் கவனம் தேவை. 3) கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது STREET VIEWS அம்சத்தை பயன்படுத்துங்கள். 4) Narrow Roads அல்லது வித்தியாசமான அறிகுறிகளை கூகுள் மேப் காட்டினால் மிக கவனம்.
வயநாடு மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற பிரியங்கா காந்தி, நாளை காலை 11 மணிக்கு எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழையப் போகிறார் பிரியங்கா. இதனால் நாளை முதல் அவரது குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப் போகிறது. அவரது கன்னிப் பேச்சை கேட்க அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலாக உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.