India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கானு கமெண்ட்ல சொல்லுங்க.
மகாராஷ்டிராவின் அடுத்த CM யார் என்ற எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வர உள்ளது. இன்று நடக்க உள்ள கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவிஸ் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன், அவரே CM என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இதனால், ஏமாற்றமடைந்த ஏக்நாத் ஷிண்டே தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நதியில் வெள்ளம் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் யாரும் பம்பை நதியில் இறங்கவோ, நீராடவோ வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, பக்தர்கள் இரவு நேரங்களில் மலை ஏறுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தான் உழைப்புக்கு உண்மையாக இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற பின் பேசிய அவர், தான் அறிவாளியா? முட்டாளா? பலசாலியா? என்று கேட்டால் தனக்கு தெரியாது எனவும், ஆனால் இந்த பட்டம் உண்மைக்கும் தனது உழைப்புக்கும் கிடைத்த பரிசு என்றும் கூறினார். மேலும், தன்னிடம் இருக்கும் ஒரு நல்ல குணம் உழைப்பு என்பதை மட்டும் 100% பெருமிதத்தோடு கூறுவேன் என்றார்.
நேற்று இரவு புறப்பட்ட நெல்லை, முத்துநகர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரூட் மாற்றப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்திற்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் இந்த ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி, அரக்கோணம், சென்னை பீச் வழியாக எழும்பூர் செல்லவுள்ளன. இதனால் திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகச் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி PM Internship Program திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹5000 மற்றும் ஒருமுறை மானியமாக ₹6000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இப்பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு திட்டத்திற்கு தகுதியானவர்களாக தேர்வாகியுள்ளனர். நாட்டின் முன்னணி நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,27,000 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கனமழை முன்னெச்சரிக்கையாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை குறைந்தால் அந்த சமூகம் அழிந்துவிடும் என மோகன் பகவத் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்கள்தொகை குறைவது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சென்றால், அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும் என்றார். மேலும், மக்கள்தொகை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழில் இமைக்கா நொடிகள், சர்தார், அரண்மனை-4 உள்ளிட்ட படங்களில் கதா நாயகியாக நடித்தவர் நடிகை ராஷிகண்ணா. கடவுள் பக்தி நிறைந்த அவர் தனது பிறந்த நாளை பெற்றோருடன் காசியில் கொண்டாடியுள்ளார். வட இந்திய பாரம்பரியப்படி, உடை அணிந்து பிரத்யேக பூஜைகள் செய்து வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி உள்ளன.
Sorry, no posts matched your criteria.