India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
’பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். அத்துடன், ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் உடனும் அவர் கைகோர்த்துள்ளார். இதனிடையே ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கும் விக்ரம் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நிலை குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி உள்ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்காக 2 நாள்களுக்கு முன்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின், அனைத்து முடிவும், புது தொடக்கத்திற்கு தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், IPL-ல் இருந்து விடைபெற்றாலும், மற்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக பதிவிட்டுள்ளார். வாய்ப்பளித்த IPL அணிகளுக்கும், BCCI-க்கும் நன்றி சொன்ன அவர், அடுத்து வர இருப்பதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடிச்ச அஸ்வினின் IPL இன்னிங்ஸ் எது?
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் புதிய பிரதமராக இங்கா ருகினீனே(44) தேர்வாகியுள்ளது அரசியலில் விநோதமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொதுத்தேர்தலுக்கு முன்புதான் அவர், சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். பின்னர், MP-யாகி 2024 டிசம்பர் முதல் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துள்ளது. இவர், அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
✪அரசியல்வாதி போல் <<17530864>>விஜய் <<>>நடக்க வேண்டும்: தமிழிசை
✪IPL-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் <<17531275>>அஸ்வின்<<>>
✪டிரம்ப்பின் 50% வரி <<17530648>>அமலானது<<>>.. ஸ்தம்பித்த துறைகள்
✪தங்கத்தின் <<17530907>>விலை <<>>சவரனுக்கு ₹280 உயர்ந்தது
✪கடத்தல் <<17531464>>வழக்கு<<>>.. நடிகை லட்சுமி மேனன் தப்பியோட்டம்
மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து விளக்குவதற்காக நெல்லையில் செப்.7-ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எரிமலை வெடித்து மக்களை துன்புறுத்தாமல் இருக்க, 700 ஆண்டுகளாக ஒரு சிறு விநாயகர் சிலை காப்பாற்றி வருவது உங்களுக்கு தெரியுமா? இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவாவில் உள்ள ப்ரோமோ எரிமலையின் விளிம்பில் உள்ள விநாயகர் சிலையால் தான், இதுவரை எரிமலை வெடிக்கவில்லை என மக்கள் நம்புகின்றனர். எரிமலை குறித்து பயமின்றி மக்கள், விநாயகருக்கு பூ, பழம் சமர்ப்பித்து வழிபாடும் செய்து வருகின்றனர். SHARE IT.
ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார். எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, லட்சுமி மேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.