News December 4, 2024

ரேஷன் வாங்க விரல் ரேகை பதிவு கட்டாயமல்ல

image

விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பாமல் பொருட்கள் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கார்டு ஸ்கேன் செய்து பொருட்களை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. மழை காரணமாக பல மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

News December 4, 2024

பத்திரப்பதிவு: நாளை கூடுதல் டோக்கன்

image

நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

News December 4, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) தீர்க்க ரேகைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? 2) பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி எது? 3) இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் யார்? 4) நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்? 5) BDS என்பதன் விரிவாக்கம் என்ன? 6) RBI வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 7) பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News December 4, 2024

‘சூர்யா 45’ ஷூட்டிங்கில் த்ரிஷா

image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. கோயில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றைய படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா கலந்து கொள்வார் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்வாஸிகா, நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

News December 4, 2024

மன்சூர் அலிகான் மகன் கைது

image

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News December 4, 2024

தோனி கூட பேசி 10 வருஷம் ஆயிடுச்சு: ஷாக் கொடுத்த பாஜி

image

இது குறித்து ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், நானும் தோனியும் பேசுறதில்லை. CSK இல் விளையாடும் போது, ​​நாங்கள் பேசினோம். அப்போதும் மைதானத்தில் மட்டுமே பேசுவோம். அறையில் நாங்கள் பேசிகொண்டதில்லை. IPLலை தாண்டி, நாங்கள் பேசி, 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேசாமல் இருப்பதற்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை. ஆனால் தோனியிடம் காரணங்கள் இருக்கலாம், அது எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

News December 4, 2024

குளிக்க சோம்பேறித்தனமா? வந்தாச்சு Human Washing மெஷின்

image

யாருப்பா காலைல எந்திரிச்சி குளிக்கிறது என கஷ்டப்படுறீங்களா? உங்களுக்காகவே ஜப்பான்காரன் washing machineஐ கண்டுபிடித்து விட்டான். அந்நாட்டின் HowerHead நிறுவனம் சயின்ஸ் கோ. AI உதவியால் குளிக்க வைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளது. நீங்க உள்ள போய் சேரில் உக்கார்ந்து போதும். 15 நிமிடத்தில் அதுவே உங்கள குளிப்பாட்டி வெளியே அனுப்பிடும். விரைவில் இது பல நாடுகளும் கிடைக்குமாம். யாரெல்லாம் வாங்க ரெடி?

News December 4, 2024

30 பேர் பலி; 3,00,000 குடும்பம் தவிப்பு.. மலேசியா மழை துயரம்

image

மலேசியா, தெற்கு தாய்லாந்தில் வெளுத்து வாங்கும் மழையால் சுமார் 3,00,000 குடும்பங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றன. இதுவரை 30 பேர் பலியான நிலையில், 40,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மலேசியாவின் பட்டானி, சோங்க்லா, யாலா மாகாணங்கள் வரலாறு காணாத அழிவைச் சந்தித்துள்ளது. இந்த துயரிலிருந்து மீளக் குறைந்தது 224 மில்லியன் டாலர் செலவாகும் என அந்நாட்டுப் பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

கொரோனா தொற்றின் 5 ஆண்டுகள்

image

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் சீனாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் நிமோனியா என்று கருதப்பட்ட இந்நோய், பின்னாளில் புதிய வகை Novel வைரஸ் என்று கண்டறியப்பட்டு WHOக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கத் தொடங்கிவிட்டது. ஐந்து ஆண்டுகளாக நீங்கா வடுக்களுடன் கோவிட் நினைவலைகள்.

News December 4, 2024

டெல்லியில் வாழ பிடிக்கவில்லை: நிதின் கட்கரி

image

டெல்லியில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக இருப்பதால், தனக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை டெல்லி செல்லும்போதும் போகலாமா, வேண்டாமா என யோசிப்பதாகவும், டெல்லியில் வாழ தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அங்கு புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே மாசு கட்டுபாட்டைக் குறைக்கச் சிறந்த வழி என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.

error: Content is protected !!