India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடியில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ள TN போலீஸ், மக்களுக்கு சில எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
✱சோஷியல் மீடியா, WhatsApp போன்றவற்றில் வரும் மெசேஜ்களை, நம்பி பணத்தை முதலீடு செய்யவேண்டாம்.
✱பேங்க் அக்கவுண்ட் விவரங்களை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம்.
✱முதலீடு செய்வதற்கு முன், SEBI இணையதளத்தில் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
பிஹாரில் BJP-யின் துரோக அரசியல் தோற்கப் போவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ராகுல் காந்தி நடத்திவரும் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் மிரட்டலுக்கு ராகுல் பணிய மாட்டார் என்றார். 400 இடங்கள் என கனவு கண்ட NDA-வை, 240 இடங்களிலேயே INDIA கூட்டணி முடக்கியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மெஜாரிட்டி என ஆட்டம் போட்டு வந்த அக்கூட்டணி தற்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு செப்.15 – 26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.10 – 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். SHARE IT.
கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015-ல் ODI உலக கோப்பையை வென்ற ஆஸி., கேப்டனான இவர், மூக்கில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக 2006-ல் இவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17531359>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 2009
2. பானு அத்தையா
3. 33%
4. யென்
5. 1912
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள EPS வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ப நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இபிஎஸ் இல்லத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் 20-க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
வாக்கு திருட்டு நடப்பதாலேயே, அடுத்த 40 ஆண்டுகளுக்கு BJP ஆட்சியில் இருக்கும் என அமித்ஷாவால் கூற முடிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாடலில் இருந்து BJP, வாக்குகளை திருடத் தொடங்கியதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிஹாரில் நடத்திவரும் யாத்திரையில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக 2,000 கிமீ கடந்து வந்துள்ளதாக கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்பதால் பிஹார் போர்க்குரல் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். BJP-க்கு பயப்படாமல் அரசியல் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என்றார்.
முதல் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி (SMS) மூலம் பதில் அனுப்பப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.