India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதாகவும், வலைகள், ஜிபிஎஸ் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக புயல் பாதிப்புகள் குறித்து விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி., தம்பிதுரை நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான புயல் பாதிப்பை தமிழகம் கண்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை & கடலோர மாவட்டங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு ஏற்கப்படவில்லை.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை உண்ட ஈசன் லிங்கத் திருமேனியாக அருள் பலிக்கும் திருத்தலம் (தஞ்சை) திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயிலாகும். மார்க்கண்டேயர் தவமிருந்து வழிபட்ட இத்திருத்தலத்திற்கு பௌர்ணமி நாளில் சென்று பிரம்ம தீர்த்தத்தில் குளித்து, இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பஞ்ச வில்வம் சாத்தி வணங்கினால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது நம்பிக்கை.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி இருப்பதாலும், மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் மழைநீர் தேங்கிய 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் திறமை தனக்கு இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். பட இயக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அட்டகத்தி பட ரிலீஸின்போது, தயாரிப்பாளர் CV குமார் பற்றி கேள்விப்பட்டு அவரை முகநூலில் பின் தொடர்ந்து வாய்ப்பு கேட்டேன். அவரிடம் ஸ்கிரிப்ட்டை அளித்தேன். படித்த உடனே படம் தயாரிக்க சம்மதம் சொன்னார்” என நெகிழ்ச்சியோடு கூறினார்.
✍மதம், அரசியல், ஆட்சி ஆகியவற்றின் நோக்கம் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதைத் தடுப்பதேயாகும். ✍எதிரி தவறு செய்யும்போது, அறிவாளி ஒருபோதும் குறுக்கிட மாட்டான். ✍அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. ✍வரலாறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு. ✍உலகம் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல; நல்லவர்களின் மௌனத்தால்தான்.
Swiggy உள்ளிட்ட டெலிவரி சேவை நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக எம்.பி., Dr.கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “துரித டெலிவரி மாடலில், காலாவதியான (அ) போலி மருந்துகளின் புழக்கம் அதிகரிக்கலாம். இது நோயாளியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். அத்துடன் தேவையான தரநிலைகளை பின்பற்றுவது இயலாமல் போகும்” என்றார்.
உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “செமஸ்டர் தேர்வுகளுக்கான திட்டம் உள்பட, மாணவர்களை சேர்க்கை கொள்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு திட்டத்தை உயர் கல்வி நிறுவனங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும்” என்றார்.
பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருப்பதாக இந்திய அணியின் வீரர் KL ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆஸி., அணிக்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால் போதும். முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு மனரீதியாக எளிதாக விளையாட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்துகிறேன்” என்றார்.
▶டிச. – 05 ▶கார்த்திகை-20 ▶ஜமா அத்துல் ஆகிர்-3 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை:9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: சுபமுகூர்த்தம் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம் & திருவாதிரை ▶நட்சத்திரம்: உத்திராடம்.
Sorry, no posts matched your criteria.