India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2ஆம் நாளான இன்று அடிலெய்ட் மைதானத்தில் உள்ள 53,500 டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. பகல்-இரவு(பிங்க் பால்) ஆட்டம் மற்றும் வார இறுதி நாள் என்பதால் ஸ்டேடியத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முதல் நாளான நேற்றும் 50,186 ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
நீங்க ஜியோ போன் வச்சிருக்கீங்களா இந்த ஆஃபர் உங்களுக்கு தான். ரூ 895க்கு 336 நாட்கள் வேலிடிட்டி . மாதம் 28 நாள்கள் என 12 மாதங்களுக்கு சுழற்சி முறையில் செல்லுபடியாகும். அதைப்போல இலவச வரம்பற்ற அழைப்பு. மாதம் 2GB என மொத்தம் 24GB டேட்டா, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, JioCinema, JioCloud இலவச சப்ஸ்கிரிப்ஷனையும் பெற முடியும்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து இந்தியா கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தகவல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் தான், வாய்ப்பு வழங்கப்பட்டால், கூட்டணியின் தலைமையே ஏற்று சரியாக வழிநடத்துவேன் என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். கூட்டணியை உருவாக்கியது தானே என குறிப்பிட்டு, அதற்கு தற்போது தலைமை ஏற்றிருப்பவர்களால் சரியாக வழிநடத்த முடியவில்லை என்றால், தாம் என்ன செய்வது என வினவியுள்ளார்.
EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க டிச.15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ELI எனப்படும் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்கு செல்வோரை ஊக்குவிக்கவும், உற்பத்தி துறையை மேம்படுத்தவும், PF நிதிக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இப்பலனை பெற பயனர்கள் UAN எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.
‘விடுதலை 2’ படத்தின் BGM பணிகள் நிறைவடைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், BGM பணிகளை இளையராஜா நிறைவு செய்துள்ளார். இதற்கு இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்து ₹101.23ஆக விற்பனையாகிறது. நேற்று லிட்டர் ₹100.80க்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்று லிட்டர் ₹92.39க்கு விற்பனையான நிலையில் இன்று 42 காசுகள் அதிகரித்து ₹92.81ஆக விற்பனையாகிறது.
1) Climatology என்றால் என்ன? 2) CCI என்பதன் விரிவாக்கம் என்ன? 3) டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? 4) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் யார்? 5) கவி ராட்சசன் என போற்றப்பட்ட புலவர் யார்? 6) ரப்பரை பதனிட உதவும் தனிமம் எது? 7) சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கோள் எது? 8) இந்தியாவில் முதல் CENSUS எந்த ஆண்டு கணக்கிடப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
அமெரிக்காவில் ₹2,600 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது. 2022ல் புளோரிடாவின் கேளிக்கை பூங்காவில் Free Fall Towerல் இருந்து தவறி விழுந்து டயர் சாம்ப்சன்(14) என்பவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், பூங்கா நிர்வாகம் பெற்றோர்கள் இருவருக்கும் தலா ₹1,312 கோடி இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என RBI ஆளுநர் சக்திகாந்ததாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டாலர் பயன்பாட்டை குறைக்க BRICS நாணயத்தை உருவாக்கும் முனைப்பில் அதன் உறுப்பு நாடுகள் திட்டமிட்டு வந்தன. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வான டிரம்பு, BRICS உறுப்பு நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மத நம்பிக்கை மனதில் இருக்கலாமே தவிர, பிறரிடம் திணிப்பதை எவ்வாறு ஏற்பது. ம.பி.யில் சிறுவன்(16) ஒருவன் 6,9,11 வயதுடைய 3 குழந்தைகளை மந்திரம் சொல்லுங்கள் என நிர்பந்தித்து செருப்பால் அடித்துள்ளான். தகாத வார்த்தையாலும் திட்டி, உறவினர்களின் தொலைபேசி எண்களை கேட்டும் மிரட்டியுள்ளார். இது குறித்து அச்சிறுவன் மீதும், வீடியோ எடுத்த சிறுவன்(14) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னவென்று சொல்வது…
Sorry, no posts matched your criteria.