India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியை குறிவைத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படவுள்ளதாக மும்பை போலீசாரின் வாட்ஸாப் நம்பருக்கு மெசேஜ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ISI அமைப்பைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் முகாமிட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் நாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் மெசேஜ் வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து மெசேஜ் வந்தது கண்டறியப்பட்டு போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கதவு திறக்காமல் போனதால், இறங்க வேண்டிய 15க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவித்துள்ளனர். ரயில் புறப்பட, ஓட்டுனருக்கு தகவல் கூறி, கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு ரயில்வே சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் தானா என கூறப்படுகிறது. புதுசு தான் ரயிலூ..?
சின்ன வயதில் இருந்து ஒரே விஷயத்திற்காக ஏங்கி அதனை நோக்கி பயணிப்பவர்களே இருவரும். ஒருவர் அம்மாவுக்கு செய்த சத்தியம். இன்னொருவர் வீட்டு பெயருக்காக. இருவரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 2ஆம் பாகத்தில், இருவருமே பெரிய அரசியல்வாதியுடன் மோதுகிறார்கள். காசுக்காக எந்த தூரத்திற்கும் போவார்கள். அம்மாவை மதிப்பவர்கள், மனைவிக்கு அடக்கமானவர்கள். இன்னும் லிஸ்ட் நீளம்…உங்களை கவர்ந்தவர் யார்..?
MHஇல் CM பதவியேற்பு விழா முடிந்து 4 நாள்கள் ஆகியும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கண்டிஷன்களை போட்டுத் தான் ஃபட்னவிஸுக்கு CM பதவியை ஷிண்டே விட்டுக்கொடுத்ததாகத் தெரிகிறது. அதில், Dy CM, உள்துறை தனக்கு வேண்டும் என்பதும் அடங்கும். ஆனால், உள்துறையை தன் வசம் வைத்திருக்க CM விரும்புவதால் ஷிண்டே தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், அங்கு புவியியல், சுரங்கத்துறை வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பின்புறம் முலைப்பால் தீர்த்தம் வழியாக மலையேறி சென்ற இக்குழு மண்ணின் தரம், பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது. டிச.13 தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே பக்தர்களை மலையேற அனுமதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யப்பட உள்ளது.
சென்னையில் முருங்கைக்காயின் விலை கிலோவுக்கு ₹400ஆக உயர்ந்து விற்பனையாகிறது. இதற்கான காரணம் மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்தாண்டு, தமிழகத்தில் முருங்கையின் விளைச்சல் குறைவாக இருப்பதால், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ரயிலில் வரும்போது வாடி விடுவதால் விமானத்தில் முருங்கையை எடுத்து வருவதாகவும், அதனால் விலை உயர்ந்திருப்பதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
பல வினோதங்கள் புரிவதே இல்லை. இதுவும் அப்படியானது தான். ஜெர்மனியில் ஒரு வெள்ளை பேப்பர் பெண்ட்டிங்கிற்கு ₹9 கோடி விலையாம். ஜெனரல் 52″ x 52″ என்ற இது வெள்ளை enamel கொண்டு, எண்ணெய் மற்றும் Pigmentsகளை வைத்து வரையப்பட்டு, கண்ணாடி தூசியை உள்ளடக்கி இருக்கிறது. இதனை ஜெர்மனி ஓவியரான ராபர்ட் ரைமன் வரைந்துள்ளார். இது வெள்ளை என்றாலும், பல நிறங்கள் அதன் அர்த்தத்தில் இருக்கிறது என்கிறார் அவர். என்னமோ….
சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை (21) பலர் பலமுறை அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட வல்லூறுகள், அவ்வப்போது அவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவியின் தோழி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
‘புஷ்பா தி ரூல்’ படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்திய சினிமாவை ரூல் செய்து வருகிறது. பான் இந்திய படமாக உருவான புஷ்பா முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.250 கோடி வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் இப்படம் மூன்று நாள்களில் மட்டும் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வேகமாக ரூ.500 கோடி வசூலித்த படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடிக்கம்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் 25 அடி உயர கொடிக்கம்பத்தை 45 அடியாக உயர்த்தியதால், மாவட்ட நிர்வாகம் திருமாவளவன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்தது. இது, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்காக, திமுக மேற்கொள்ளும் பழிவாங்கல் நடவடிக்கை என பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.