India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுகளில் 33,000 வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப விவகாரங்கள் குறித்த 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17,638 வழக்குகள் இந்தாண்டில் தொடரப்பட்டவை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.
கர்நாடக வங்கியில் P.O. வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். நாடு முழுவதும் உள்ள கர்நாடக வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள P.O. வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு <
தனது வாழ்க்கையை கேன்சர் நோய் புரட்டிப் போட்டு விட்டதாக நடிகை கவுதமி வேதனை தெரிவித்துள்ளார். சந்தேகத்தின்பேரில் தாம் மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போதுதான் தனக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகளுக்காகவே தாம் வாழ்ந்ததாகவும், கேன்சருக்கு தாம் எடுத்த சிகிச்சைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறியதாகவும் கவுதமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மனநிலை குன்றிய கல்லூரி மாணவியை 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவியை 7 பேர் பல மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பிற மாநில குற்றச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின், இதுகுறித்து ஏன் பேசாமல் இருக்கிறார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு சிரியா வழியாகவே ஈரான் ஆயுதம் அனுப்பி வந்தது. அதை வைத்தே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். ஈரானின் நெருங்கிய நண்பராக கூறப்பட்ட சிரியா அதிபர் ஆசாத், நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் இனி ஆயுதங்களை ஈரானால் அனுப்ப முடியுமா என்பது தெரியவில்லை. ஆயுதம் அனுப்பவில்லையேல், இஸ்ரேலுக்கு கிடைத்த வெற்றியாக அது கருதப்படும்.
விஸ்கர்மா திட்டத்தை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றுதான் நிலையானது என்பதை அறிந்தே, அனைவரும் கல்வி கற்பதற்காக பல திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வி கற்க செல்வோரை தடுத்து, குடும்பத் தொழிலில் ஈடுபட வைக்க விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை
*உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் உச்சம்
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம்
*வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, தீய வாழ்க்கையை வாழ்வதே
*எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
ஓடிசா- ஆந்திராவுக்கு சுமார் 1,220 கி.மீ. தூரத்துக்கு சரக்கு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் இந்த ரயில், 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் 364 சரக்கு பெட்டிகள் உடையதாகும். 3 என்ஜின்களை கொண்டு மணிக்கு 25-30 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. பயணத்துக்கு 8 நாள் எடுக்கும் இந்த ரயில்தான், இந்தியாவிலேயே மிக நீள ரயில் என்ற சாதனையை புரிந்துள்ளது.
இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.