India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ள குகேஷுக்கு CM ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசு அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் லிரேனை வீழ்த்திய குகேஷுக்கு பதக்கத்துடன் ரூ.11.45 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில், Dy CM உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொரு வருடமும் சொல்லி வரும் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னாவிடம், விராட் கோலி ஏன் தற்போது வரை கோப்பையை வெல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “2025 ஐபிஎல் கோப்பையை கோலி வெல்லுவார்” என பதில் அளித்தார். அவரது இந்த வார்த்தை துவண்டு போய் இருக்கும் ஆர்சிபி-க்கு சற்று ஆறுதலை அளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.
செந்தில் பாலாஜி(VSB) இன்னும் அமைச்சராக தொடர்கிறாரா என SC காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. பண மோசடி வழக்கில் சிறை சென்ற VSB, 15 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வந்து மீண்டும் அமைச்சரானார். இதனை எதிர்த்து வித்யா குமார் தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், வரும் 18ம் தேதிக்குள் VSB எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜாமின் கிடைத்த மறுநாளே ஏன் அமைச்சரானார் என கடந்த 2ஆம் தேதியும் SC கேட்டிருந்தது
புஷ்பா – 2 படம் பார்க்க வந்த பெண் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியாவதற்கு முதல் நாளே ப்ரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்டது. அதனைப் பார்க்க மகனுடன் வந்த ரேவதி என்ற பெண், நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.
உலகில் நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில், கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வரும். அப்படி தான் தற்போது கூகுள் செஸ் டூடுலை வைத்துள்ளது. இன்று முக்கிய செய்தியாக இருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கவுரவிக்கும் வகையில் தனது டூடுலில் செஸ் விளையாட்டை மையப்படுத்தியுள்ளது. மேலும், குகேஷை பாராட்டும் வகையில் இந்த டூடுல் இடம் பெற்றிருப்பது, நமக்கு கூடுதல் சிறப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘பொங்கல் தொகுப்பு’ வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ₹199க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு, ₹499க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு, ₹999க்கு மாபெரும் பொங்கல் தொகுப்பு என்று விற்பனை செய்யப்படவுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18ஆவது உலக செஸ் சாம்பியனாக குகேஷ் நேற்று மகுடம் சூடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாலை 6.05 மணி முதல் 6.30க்குள் தீபம் ஏற்றிவிடுவது மிகவும் நல்லது. வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றுதல், 27 நட்சத்திரங்களை குறிக்கும். இதனால், பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 27 முடியாதவர்கள் 9 விளக்குகள் ஏற்றலாம். குறிப்பாக, தெற்கு திசை நோக்கி விளக்குகளை ஏற்றக்கூடாது. உங்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோஹித் ஷர்மா, மீண்டும் ஓப்பனராக களமிறங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மிடில் ஆர்டருக்கு கே.எல்.ராகுல் தள்ளப்படுவார். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்களால் இடம் பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுலுக்கு மீண்டும் இடம் மறுக்கப்படுகிறதா? என கேள்விகள் எழுகின்றன. ரோஹித்தின் முடிவு சரிதானா?
ஊடகங்கள் மீதான தனது தாக்குதலுக்கு மோகன் பாபு எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றிய எக்ஸ் தளப்பதிவில், எனது குடும்பத்தின் சம்பவம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறி, பத்திரிகையாளர்களை கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன். சம்பவத்திற்குப் பிறகு 48 மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்ததால், உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. சம்பவத்தில் ஊடகவியலாளர் காயமடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.