India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை காலை ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவையொட்டி ஒரு வாரம் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று (டிச.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
6 முறை ராஜ்ய சபா MP- ஆக இருந்த மன்மோகன் சிங், ஒருமுறைகூட மக்களவை MP ஆக இருந்ததில்லை. 1991-ல் முதல் முறை பதவியேற்றவர், 2024 வரை 33 ஆண்டுகள் பார்லிமெண்டில் இருந்துள்ளார். 1999-ல் தெற்கு டெல்லி LS தொகுதிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 5 முறை அஸ்ஸாமில் இருந்தும், கடைசி முறை ராஜஸ்தானிலும் தேர்வானார். கள அரசியலை தாண்டி எதிர்க்கட்சி தலைவர், PM போன்ற முக்கிய பதவிகளை அலங்கரித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்ற பிரதமர்களை போல் நிறைய பேசி நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர் வார்த்தைகளால் பேசக்கூடியவர் அல்ல. செயல் வீரர். 1991 முதல் 1996 வரை நாட்டின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதம் 10.2% இருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மன்மோகன் சிங் ஆட்சியில், சில திட்டங்கள் சாதாரண குடிமகனுக்கு அதிகாரம் அளிப்பதாக அமைந்தது. அப்படிதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசு துறைகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை கேட்டு பெறும் அதிகாரம் சாதாரண மனிதனுக்கும் கிடைத்தது. மேலும், எல்.பி.ஜி. கொள்கை, ஆதார் அட்டை திட்டம் உள்ளிட்டவையும் அவர் அறிமுகம் செய்தவையே.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (2005) (100 நாள் வேலை திட்டத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது)
* தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) (இத்திட்டத்தினால் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை அதிகரித்தது)
* தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (2013) (இத்திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது).
2018-ம் ஆண்டு RS எம்பி பதவிக்கு தாக்கல் செய்த வேட்புமனுவில் மன்மோகன் சிங் தனது மொத்த சொத்து மதிப்பாக குறிப்பிட்டது- ரூ.15 கோடியே 75 லட்சம். 2018-19 ஆம் ஆண்டுக்கான அவரது மொத்த வருவாய் ரூ.89 லட்சத்து 42 ஆயிரம். 2012 ஆம் ஆண்டு தகவலின்படி டெல்லி மற்றும் சண்டிகரில் அவருக்கு பிளாட்கள் இருந்தன. 150 கிராமில் தங்கம் இருப்பதாக அந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதது.
மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடியான காலங்களிலும் கருணாநிதி- சிங் ஒன்றிணைந்து, கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தியதாகவும், பிரதமர் என்பதை தாண்டி, TN மக்களுக்கு நண்பராக விளங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். வாய்ச்சொல் வீரராக அல்லாமல், தனது தீர்க்கமான செயல்பாடுகளால் மன்மோகன் சிங் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். X பதிவில், “என்னுடைய வழிகாட்டியை இழந்துவிட்டேன். மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியதாக, புகழாரம் சூட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.