India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஜே.பி.நட்டா தற்போது அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே இவரது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மேலிடம். இந்நிலையில் ஜனவரி மாதத்தில், புதிய தலைவர் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் என்றாலே இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வழிபடுவர். டிசம்பர் 26ஆம் தேதி மண்டல கால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று மகர பூஜைக்காக திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் இந்தியாவின் டிஜிட்டல் சேவைகள் ஏற்றுமதி ₹2.92 லட்சம் கோடி என்ற வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு முதலீடு, தரவு மையம், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட காரணங்களால் இந்த துறை அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த, 2005இல் ₹2.55 லட்சம் கோடியில் இருந்த ஏற்றுமதி, 2023இல் ₹21.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
தென் கொரியாவின் முவான் நகரில் நேற்று தரையிறங்க முயன்ற Jeju AIr விமானம் சுவற்றில் மோதி வெடித்தது. இந்த விபத்திற்கு முன் பயணி ஒருவர் குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில், விமானத்தின் மீது பறவை மோதிவிட்டதாகவும் ”எனது கடைசி வார்த்தைகளை அனுப்பவா?” என்றும் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ICC விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ICC வெளியிட்டது. இதன்படி, சிறந்த ODI போட்டி வீராங்கனை விருதுக்கு ஸ்மிருதி மந்தனா, சிறந்த சர்வதேச T20 போட்டி வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மக்களிடம் பொதுவான வழக்கங்கள் இல்லாத போது, மத வழிபாடுகளின் அடிப்படையில் விடுமுறை தினங்கள் இருந்தது. ஞாயிற்றுகிழமை வார முதல் நாளாக இருந்தது. ஆனால், 2 நாள் விடுமுறையாக சனி, ஞாயிற்றை 1926ல் ஹாரிசன் போர்ட் கொண்டு வந்த பிறகு, அது பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகே, வாரம் என்பது திங்கள் – வெள்ளி என மாற, 1988ல் தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) இதனை அதிகாரபூர்வமாக உலகெங்கும் அமல்படுத்தியது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜன. 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தி தினமான இன்று விரதம் இருந்து வழிபட்டால், அவரை அருள் கிடைக்கும். வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் வழிபடலாம். இவை அனைத்தையும் விட சக்திவாய்ந்தது ராம நாமத்தை உச்சரிப்பது. 13 முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றை கையில் வைத்து “ஓம் நமோ வாயுநந்தனாய ஓம்” என்ற மந்திரத்தை 9, 11, 27 முறை சொல்லி, கழுத்தில் அணிந்து கொண்டால் அனுமன் எப்போதும் துணையாக நிற்பார் என்பது நம்பிக்கை.
தமிழக பெண்களுக்கு “அன்புத் தங்கைகளே” என்று குறிப்பிட்டு உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதில், “அண்ணனாகவும், அரணாகவும் நான் உங்களுடன் உறுதியாக நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாய்மார்கள், பெண் குழந்தைகள், தங்கைகள் என அனைவரும் தினந்தோறும் பல கொடுமைகளை அனுபவிப்பதாகவும் ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தேவாரம் பாடல் பெற்ற 14ஆவது காவிரி வடகரை தலமாக சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. பிரம்மனுக்கு சிருஷ்டியை படைப்பதற்கான ஆற்றலை ஈசன் வழங்கிய இந்த திருத்தலம் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்கிறது தலப்புராணம். சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என 3 நிலைகளில் அருள் பாலித்து வரும் இறைவனுக்கு பவளமல்லி மலர் சூட்டி, நெய் ஞானம் கைகூடும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.