News January 2, 2025

எவனோ நம்ப பையன் தான்….

image

நம் ஊரில் பொருளை வாங்க சாக்குப்பையை தூக்கிட்டு போவாங்க. ஆனால் மாடர்ன் ஜெனரேஷன் அதை விரும்புவதில்லை. ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து புதுசு புதுசாக வாங்குகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் பெண் ஒருவர் பாஸ்மதி அரிசி பையினால் ஆனா பையை மாட்டிக்கொண்டு பர்சேசிங்கிற்கு வந்து இணையத்தை அலறச் செய்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், எவனோ நம்ப பையன் தான் என கமெண்ட் செய்கிறார்கள். ஆனா, இதுவும் நல்லா தான இருக்கு!

News January 2, 2025

முதலீட்டாளர்களை திருப்திபடுத்துமா சந்தை?

image

நடப்பு ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 2ஆவது நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு சென்செக்ஸ், நிஃப்டி முறையே வெறும் 8.17%, 8.8% மட்டுமே ஏற்றம் கண்டன. முதல் அரையாண்டில் நல்ல ரிட்டர்ன் இருந்தாலும், 2ஆவது அரையாண்டில் சந்தை வெகுவாக சரிந்தது. அதே நேரம் தங்கம் 26% லாபம் கொடுத்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் பங்குச்சந்தை மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News January 2, 2025

ஹீரோயின்னு சொல்லி காமெடி ஆக்கிட்டாங்க!

image

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தது குறித்து நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அப்படத்தில் தனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் சொன்னதைபோல இல்லை என்றார். நானும், மீனாவும் கதாநாயகிகள் எனக் கூறியதாகவும், ஆனால் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்தார். ரஜினிக்கு திடீரென ஹீரோயின் கிடைத்ததால் தனது ரோல் காமெடியானதாகவும் வருந்தினார்.

News January 2, 2025

பாமக சார்பில் ‘Am I Next?’ போஸ்டர்

image

PMK சார்பில் சென்னையின் பல பகுதிகளில் ‘Am I Next?அடுத்தது நானா?’ எனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அடுத்தது நானா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதோடு, திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

உலக இன்ட்ரோவர்ட் தினம் இன்று..

image

10 பேர் ஒன்றாக இருந்தால் பேச கூச்சம், கூட்டம் பிடிக்காது, நண்பர்களுடன் இருக்கும் போதும் அமைதி தான். இது அவர்களின் குணாதிசயம், அதில் தவறில்லை. அப்படி அமைதியாகவே இருப்பவர்களுக்கு தான் இன்று உலக இன்ட்ரோவர்ட் தினம் கொண்டாடப்படுகிறது. ஹாலிடே சீசன் இன்றுடன் முடிவதால் இன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் சந்தேகம் என்னவென்றால், இன்றாவது இவர்கள் கொண்டாடுவர்களா அல்லது இன்றும் சைலண்ட் தானா?

News January 2, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

image

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. நேற்று சவரன் ₹57,200 என்று விற்கப்பட்ட தங்கம், இன்று சவரன் ₹57,440 என்று விற்கப்படுகிறது. நேற்று ₹7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹30 உயர்ந்து ₹7,180ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹99க்கு விற்பனையாகிறது.

News January 2, 2025

விலகிய விடாமுயற்சி: லைனில் நிற்கும் அரைடஜன் படங்கள்

image

விடாமுயற்சி என்ற ஒரு படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதன் காரணமாக, தற்போது பல படங்கள் பொங்கலுக்கு வெளிவர தயாராகிவிட்டன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வணங்கான், கேம் சேஞ்சர் படங்களுடன் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, சிபியின் டென் ஹவர்ஸ், சண்முக பாண்டியனின் படைத்தலைவன், மிர்ச்சி சிவாவின் சுமோ, மெட்ராஸ்காரன், தருணம், 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. நீங்க எதுக்கு வெயிட்டிங்?

News January 2, 2025

கொலையில் முடிந்த புத்தாண்டு கோலம் சண்டை

image

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருந்த இளைஞர், புத்தாண்டு கோல பிரச்னையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை காசிமேடு பகுதியில் உள்ள தெருவில் புத்தாண்டையொட்டி சில பெண்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற குமரனுக்கும், ஒரு பெண்ணின் கணவர் சரவணனுக்கு வாய்த் தகராறு ஏற்பட்டதில் குமரனை சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுக்கெல்லாமா கொலை செய்வீங்க?

News January 2, 2025

பும்ரா இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்?

image

நடப்பு BGT தொடரில் இதுவரை இரண்டு தோல்விகளை இந்திய அணி கண்டுள்ளது. இதனால், நமது அணியின் செயல்திறன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பும்ரா மட்டும் இத்தொடரின் 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் இருக்கும் சிராஜ் 16 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். வித்தியாசத்தை பாருங்கள். பும்ரா மட்டும் இல்லையென்றால் வரலாற்றில் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்திருக்கும்.

News January 2, 2025

பாமகவினரை கைது செய்ய ஏற்பாடு

image

அண்ணா யூனிவ்., மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்திருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடத்துவோரை கைது செய்ய பஸ்கள், வேன்களையும் வள்ளுவர் கோட்டம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் பாமகவினர் போராட்டம் நடத்த வந்தவண்ணம் உள்ளனர். இதனால், இன்னும் சற்று நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

error: Content is protected !!