India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ அருள் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், இதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சௌமியாவை, போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தை சுட்டிக்காட்டும் அதிமுகவிற்கு பதிலளிப்பதை விடுத்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை திமுக காப்பாற்ற முயல்வதாக சாடியுள்ள அவர், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மௌன சாமியாராக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் சேர்த்து ரூ.1000 வழங்கப்படும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ரூ.1000 கிடையாது என அரசு அறிவித்துவிட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகி CTR.நிர்மல்குமாருக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் மின்கசிவு என பொய் தகவல்களை பரப்பியதாக, நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நிர்மல் குமார் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் C மற்றும் D பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 163.81 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆஸி., அணிக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் IND மோசமாக விளையாடியதால், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கடைசி போட்டியில் இருந்து ரோஹித் விலகியுள்ளார். அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையினருக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனம் உருக்குலைந்து போயுள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், வீடு மற்றும் உறவுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முவாசி பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை பயங்கர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹1,365 கோடி உண்டியல் காணிக்கை வரப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும்
2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடகள வீராங்கனை அன்னு ராணி, செஸ் வீராங்கனை வந்திகா அகர்வால், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன், நிதேஷ்குமார் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பவாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அஜித் பவாரின் தாயார் அஷதை பவார் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது உறவினரும், NCP மூத்த தலைவருமான பிரபு படேலும் இந்த கருத்தைக் கூறியிருந்த நிலையில், NCP மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டிச.12ம் தேதி 84ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சரத் பவாரிடம் அஜித் பவார் தனது மனைவியுடன் நேரில் சென்று ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.