India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, $640.27 பில்லியனாக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு $541 மில்லியன் உயர்ந்து $66.26 பில்லியனாக இருக்கிறது.
பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் நீடிப்பது சந்தேகம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பிஹாரில் கூட்டணிக் கட்சியை பாஜக முதுகில் குத்தியுள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இதனால் கலக்கத்தில் இருக்கும் நிதிஷ், அக்கூட்டணியில் தொடர்வது சந்தேகம்தான் என்றும் தெரிவித்தார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரமும், 2 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வைல்டு கார்டு என்ட்ரியில் BB வீட்டிற்குள் சென்ற மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. அவர்களை சக போட்டியாளர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள BB சீசன் 8 டைட்டில் வின்னராக யார் வருவார்? கமெண்ட்ல சொல்லுங்க.
உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தனது காதலி விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார். நார்வேயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதில் இருந்தும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்ல்சன் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*1664 – சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். *1918 – ஜெர்மன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது. *1940 – பண்பலை வானொலி முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. *1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்பேர்ணில் நடைபெற்றது. *2014 – இந்தியாவின் ஜிசாட் 14 செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அந்த அணி மேலும் 2 கோல்களை அடித்து அசத்தியது. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.
*முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும். *மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி. *மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். *நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. *எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
‘இந்தியன் 3’ பஞ்சாயத்தால், ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க, லைகா நிறுவனம் சங்கத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லைகா-ஷங்கர் இடையே உள்ள பிரச்னையை, தனது படத்தின் மீது திணிப்பதாக, ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 3ஆவது நபரான தன்னை இதில் இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 139 ▶குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். ▶பொருள்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாள்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. டெல்லி பயணத்திற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Sorry, no posts matched your criteria.