India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள் என PM மோடி கூறியுள்ளார். வளர்ந்த இந்தியாவின் தலைநகராக DLஐ மாற்ற வேண்டும் என்பதே தங்களது கனவு எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும், DLக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் உறுதி அளித்தார். டெல்லி சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
பிரபல நடிகர் பிரபு ஹாஸ்பிடலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில், அண்மையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் அதே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் மூளையில் வீக்கம் இருப்பது தெரிந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் என 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்தியதாக இந்திய கேப்டன் பும்ரா கூறியுள்ளார். தொடர் நாயகன் விருதை வென்ற பிறகு பேசிய அவர், இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது பெரிய ஏமாற்றம் என்றார். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெற்ற ஆஸி., அணியை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு ஜன.9 முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் அட்டைதாரர்கள் நேரில் வர வேண்டும் என்றும், கைவிரல் ரேகையை பதிவு செய்து, பிறகு அங்குள்ள புத்தகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே தொகுப்பு வழங்கப்படும். மாற்று நபர்களை அனுப்பி வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
இன்று 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு ₹500 கோடிகள் என ரிப்போர்ட் கூறுகிறது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இவர் இருக்கிறார். ஒரு படத்திற்கு ₹15-₹20 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். ₹78 கோடி மதிப்பில் 3 பங்களாக்களை வைத்துள்ளார். ரேஞ்ச் ரோவர், பென்ஸ், BMW உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன.
அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுகவை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே விமர்சிக்கின்றன. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள திமுக, இது தோழமைக்கு நல்லதல்ல என முரசொலி நாளிதழ் வாயிலாக எச்சரித்திருந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும், திமுக கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
OYO ஹோட்டல்களில் திருமணமானவர்கள் மட்டுமே இனி ஜோடியாகத் தங்க முடியும். முதற்கட்டமாக UPஇன் மீரட்டில் இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் வாயிலாக புக்கிங் செய்தாலும், திருமணமானதற்கான அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டுமே ஜோடியாக தங்க அனுமதி எனக் கூறியுள்ள அந்நிறுவனத்தின் வடக்கு மண்டல அதிகாரி பவாஸ் ஷர்மா, இந்த நடைமுறை விரைவில் மற்ற பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாணவிகள் கறுப்பு துப்பட்டா அணிந்துவர தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த மாணவிகளிடம் கறுப்பு துப்பட்டா வாங்கி வைக்கப்பட்டதாகவும், வெளியே வரும்போது திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக, தேமுதிக கூட்டணி தொடரும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2021தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியமைத்து படுதோல்வியடைந்த தேமுதிக, 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியமைத்து தோல்வி கண்டது. 2026ஆம் ஆண்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணியில் தொடரப் போவதாக அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.