India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு தங்களை அழைக்கவில்லை என்றும் அழைத்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம் எனவும் ஜான் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
2027 ஆகஸ்டில் ஓய்வு பெற இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார். முன்னதாக, துணை ஜனாதிபதியாகும் முன்பு மே.வங்க ஆளுநராக தன்கர் பதவி வகித்தார். பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
‘குட் நைட்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சந்திரசேகரன் அடுத்து SK படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு SK பிரேக் போட்டுள்ளாராம். ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவருக்கு கதை சொல்ல, அதில் பயங்கர இம்ப்ரஸான SK, அந்த படத்தை முதலில் தொடங்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்ததும் அறிந்ததே. அதன்பிறகு 2 பேர் இடையேயான கருத்து வேறுபாடு குறையவில்லை எனவும், 2 பேரின் ஆதரவாளர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் இனி சமாதானம் செய்ய முடியாது என வைகோவும் புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 4 நாள்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளை அழைத்த வைகோ, இனிமேல் பேனர்கள், விளம்பரங்களில் மல்லை சத்யா படம், பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்தே பேட்டியில் மல்லை சத்யா குறித்த அதிருப்தியை வைகோ வெளிப்படுத்தியதாகவும், பதிலுக்கு சத்யாவும் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
சுற்றுப்பயணத்தின்போது கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தை அழைத்துச் செல்வது தொடர்பாக BCCI வெளியிட்ட புதிய விதிகளுக்கு கோலி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கம்பீர், குடும்பம் முக்கியம்தான்; ஆனால் இங்கு நீங்கள் வந்திருக்கும் காரணம் வேறு என கூறியுள்ளார். ஒரு டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் குறைவான நபர்களுக்குத்தான் நாட்டையே பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
வைகோ நன்றி மறக்கக்கூடாது என்று D ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என வைகோ பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு அவர் வந்தபோது 5 சீட் கொடுக்கப்பட்டு 3 எம்பிக்கள் நாடாளுமன்றம் சென்றதாக குறிப்பிட்டார். எனவே, மறைந்த ஒரு தலைவரை இழிவுபடுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறிய PS ஸ்ரீராமனின் கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இவரிடம் 3-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எனவே தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலையில் மட்டும் இதுவரை 7.2 லட்சம் பேரின் வீடுகளுக்கு வாகனங்களில் நேரில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் ஊழியர்கள் நேரில் சென்றபோது, 2.25 லட்சம் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.
வெள்ளம் & நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ₹1,066.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அசாம் – ₹375.60 கோடி, மணிப்பூர் – ₹29.20 கோடி, மேகாலயா – ₹30.40 கோடி, மிசோரம் – ₹22.80 கோடி, கேரளா – ₹153.20 கோடி & உத்தராகண்ட் – ₹455.60 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.