India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை அனுஷ்கா தனது முதல் காதல் குறித்து சுவாரசிய தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தனது கிளாஸ்மேட் ஒருவர் ‘ஐ லவ் யூ’ என தன்னிடம் கூறியதாகவும் அதற்கு தானும் ஓகே சொன்னதாகவும் அனுஷ்கா தெரிவித்தார். அப்போது காதல் என்றால் என்ன என்பதே புரியவில்லை எனக் குறிப்பிட்ட அனுஷ்கா, தற்போதும் அது இனிமையான நினைவுகளாக இருப்பதாக தெரிவித்தார்.
கோவையில் 1998-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாதிக் (எ) டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 1998, பிப்ரவரி 14-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஃப்ரீடம்’. இலங்கை சிறையில் இருந்து தப்பிக்கும் தமிழர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், பொருளாதார காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. நாளை வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிற்பகலில் வெளியாகும்.
சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் மேற்பரப்புக்கு கீழே பல tectonic plates உள்ளன. அவை இடமாற்றம் அடையும் போது, உராயும் அதிர்வுகளே <<17014398>>நிலநடுக்கமாக <<>>உணரப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படும் இடத்தை ‘மையப்புள்ளி’ என்றும், அதன் நேர்கோட்டில் உள்ள பூமியின் மேற்பரப்பை ‘மையப்புள்ளி மேல் பகுதி’ என்பார்கள். நிலநடுக்கத்தின் போது பூமிக்கு அடியில் பாறைகள் உடைகின்றன, புது பிளவுகள் உருவாகின்றன, அதிர்வுகள் பரவி நில அமைப்பை மாற்றுகின்றன.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று இறங்குமுகத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130புள்ளிகள் சரிந்து 83,405 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 42 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 25,433 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ஐ.டி. துறை பங்குகள் சரிவடைந்துள்ள நிலையில், மெட்டல் துறையில் பங்குகள் சற்று ஏற்றம் கண்டுள்ளன.
தெ.ஆப்பிரிக்க டி20 லீக்கான SA20 சீசன் 4, டிச.26 தொடங்கி 2026, ஜன.25-ல் முடிவடைகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. மேலும், குவாலிஃபயர் 1 ஜன.21, எலிமினேட்டர் சுற்று ஜன.22 & குவாலிஃபயர் 2 ஜன.23-லும் நடைபெறவுள்ளது. MI அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்ற முனைப்பு காட்டும்.
இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.
KGF படத்துக்குப் பிறகு, இசையை சத்தமாக வைத்தால் காட்சி தப்பித்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாக சாம் CS கூறியுள்ளார். இவரது இசை சத்தமாகவும், இரைச்சலாகவும் உள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கு ‘ட்ரெண்டிங்’ பட விழாவில் பதிலளித்த அவர், ஒரு படத்திற்கு இசையமைத்த பிறகு சவுண்ட் எஃப்க்ட்ஸ், வசனங்களை வைத்து ஒரு Output வரும், அதற்கும் இசையமைப்பாளர்களுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 10) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,020-க்கும், சவரன் ₹72,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.