News August 28, 2025

இந்திய விண்வெளி துறையில் அடுத்த மைல்கல்

image

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இங்கு 90 கோடி ரூபாய் மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு, உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கவுள்ளன. இதில் பேசிய நாராயணன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் ஏவப்படும் என்றார். இந்தியாவின் 4வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமையவுள்ளது.

News August 27, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்

image

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.

News August 27, 2025

வீரநடை போடும் பி.வி.சிந்து

image

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் அவர், மலேசியாவின் கருப்பதேவனை எதிர்கொண்டார். முதலில் 12-18 என பின்தங்கியிருந்த சிந்து, அதன் பிறகு சிறப்பாக ஆடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

News August 27, 2025

சண்டை போட்டாலும் சேர்ந்தே பயணித்தாக வேண்டும்: USA

image

இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

image

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News August 27, 2025

நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

அதிமுக கூட்டணியில் விஜய்: RB உதயகுமார் சொல்வதென்ன?

image

அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.

News August 27, 2025

தமிழகத்தில் கவனத்தை ஈர்த்த விநாயகர்கள் PHOTOS

image

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை என்னென்ன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். Swipe செய்து பார்க்கவும்.

News August 27, 2025

அந்தரங்க வீடியோ.. தமிழகத்தில் பயங்கரம்

image

புதுமண தம்பதியின் படுக்கை அறையில் ரகசிய வீடியோ பதிவு செய்ததோடு, அந்த வீடியோவை காட்டி பெண்ணை படுக்கைக்கு அழைத்த 20 வயது கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அருகே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என கூறும் சமூக ஆர்வலர்கள், நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மக்களே உஷார்..!

News August 27, 2025

உக்ரைன் – ரஷ்யாவிற்கு பேரழிவு ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை

image

உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!