India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை என்னென்ன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். Swipe செய்து பார்க்கவும்.
புதுமண தம்பதியின் படுக்கை அறையில் ரகசிய வீடியோ பதிவு செய்ததோடு, அந்த வீடியோவை காட்டி பெண்ணை படுக்கைக்கு அழைத்த 20 வயது கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அருகே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என கூறும் சமூக ஆர்வலர்கள், நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். மக்களே உஷார்..!
உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தாவிட்டால் இருநாடுகள் மீதும் பொருளாதார போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தும், புடினும், ஜெலன்ஸ்கியும் அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
HIV தொற்று நோய்க்கான ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி இன்னும் 2 ஆண்டுகளில் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மரபணு ரீதியில் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் எனவும், வைரஸை தடுக்கும் வகையில் உடல் செல்களுக்கு மரபணு வழிகாட்டல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சில அமெரிக்க மருத்துவ நிறுவனங்களும் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.
உங்கள் குழந்தை உங்கள் பேச்சை மதிப்பதே இல்லை என கவலையா? இந்த சிம்பிள் விஷயங்கள் உங்கள் மேல் உள்ள அவர்களது பார்வையை மாற்றும். ▶ காலையில் குழந்தையை அன்பாக எழுப்புங்கள் ▶அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டவும் ▶உணவு நேரத்தை இனிமையாக்குங்கள் ▶குழந்தைகள் முன் சண்டை வேண்டாம் ▶மற்றவர்கள் முன் அவர்களை திட்டக்கூடாது ▶கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட வேண்டாம். SHARE IT.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம்னி பஸ்களில் விமானத்தை விட கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக மதுரை – சென்னைக்கு ₹600 – ₹900 வசூலிக்கப்படும் நிலையில் இன்று ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி – சென்னை ₹2,300, நாகர்கோவில் – சென்னை ₹4,500, நெல்லை – சென்னை ₹5,000 வரை உள்ளதால் பொதுமக்கள் புலம்புகின்றனர்.
இந்தியாவுக்கு மீண்டும் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என விஜய் அண்மையில் கூறியிருந்தார். இதுபற்றி பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும், கச்சத்தீவு இன்று மட்டுமில்லை என்றும் இலங்கையின் ஒரு பகுதி என்றார். தமிழகத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் வாக்குகளை பெற இதைப்போன்ற கருத்துகள் கூறப்படுவதாகவும் விமர்சித்தார்.
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால், இந்தியாவின் ஜவுளித்துறை தான் மிக அதிகமாக பாதிக்கப்பட உள்ளது. இதை சரிசெய்ய ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்பட 40 நாடுகளுக்கு டெக்ஸ்டைல் ஏற்றுமதியை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தரம், நிலைத்தன்மை, புதுமையுடன் இந்திய டெக்ஸ்டைல் பொருள்கள் இருக்கும் என்ற உறுதியுடன் 40 நாடுகளுடன் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
2030 காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமை கோருதலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவின் விண்ணப்பத்தை CommonWealth Games Federation ஏற்றால் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்திட ஒப்பந்தம், நிதி குஜராத்திற்கு வழங்கப்படும். இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள். இதற்கு முன்பாக இந்தியாவில் 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது.
சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில், 1 ILR, 2 INSAS ரைபிள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்கெனவே நடப்பாண்டில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.