India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல தமிழ் நடிகை அம்பிகா அரசியலில் இறங்க உள்ளதாக அதிரடியாக கூறியுள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், தனியார் TV ஒன்றிற்கு பேசிய அவர், மனிதர்களை பிடிக்கும் என்பதால் இங்கே வந்ததாகவும், நான் அரசியலுக்கு வந்த பிறகு புகாருக்கு ஆளாகும் அரசியல்வாதியாக ஒருபோதும் இருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
செப்டம்பர் 7-ம் தேதி இரவு முதல் 8-ம் தேதி அதிகாலை வரை நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரப் போகிறது. இது ‘Blood Super Moon’ என கூறப்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம், ஆழ்ந்த செம்மஞ்சள் நிறத்தில் உலகம் முழுவதும் தெரியும். பண்டைய காலத்தில் இது, புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்த நிலவை வெறும் கண்களில் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலை., பொறியியல் படிப்புகளில் சில பாடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, BE, B.Tech-ல் AI பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், டேட்டா சயின்ஸ், தயாரிப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், வாழ்க்கை திறன்கள், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டங்களால், வேலைவாய்ப்பு, மேற்படிப்புகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு பிப்.7-ல் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாடு எப்படி நடத்த வேண்டும், எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்பதை அங்கு பாருங்கள் என விஜய்யை சாடினார். மேலும், அணில் ஏன் Uncle Uncle என கத்துகிறது, Jungle Jungle என்று தானே கத்த வேண்டும் என கடுமையாக தாக்கி பேசினார். ஏற்கெனவே அணில் மரத்தில் இருக்க வேண்டும் என்று விஜய்யை விமர்சித்திருந்தார்.
TNHB-ல் வீடு வாங்கி தவணை கட்ட தவறியவர்களுக்கு அபராத வட்டியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. 2015 மார்ச் 31-ம் தேதிக்கு முன்னர், தவணை காலம் முடிந்த குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு இந்த சலுகை பொருந்தும். இது மார்ச் 31 2026 வரை அமலில் இருக்கும். தற்போது சென்னை, கோவை, திருச்சி மாவட்ட கலெக்டர்களும் பயனாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடியில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ள TN போலீஸ், மக்களுக்கு சில எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
✱சோஷியல் மீடியா, WhatsApp போன்றவற்றில் வரும் மெசேஜ்களை, நம்பி பணத்தை முதலீடு செய்யவேண்டாம்.
✱பேங்க் அக்கவுண்ட் விவரங்களை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம்.
✱முதலீடு செய்வதற்கு முன், SEBI இணையதளத்தில் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
பிஹாரில் BJP-யின் துரோக அரசியல் தோற்கப் போவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ராகுல் காந்தி நடத்திவரும் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் மிரட்டலுக்கு ராகுல் பணிய மாட்டார் என்றார். 400 இடங்கள் என கனவு கண்ட NDA-வை, 240 இடங்களிலேயே INDIA கூட்டணி முடக்கியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மெஜாரிட்டி என ஆட்டம் போட்டு வந்த அக்கூட்டணி தற்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு செப்.15 – 26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.10 – 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். SHARE IT.
கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015-ல் ODI உலக கோப்பையை வென்ற ஆஸி., கேப்டனான இவர், மூக்கில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக 2006-ல் இவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.