India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ பட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், இதில் SJ சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம். தற்போது ‘Killer’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை SJ நிறைவு செய்துள்ளாராம். ஏற்கெனவே, இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், ‘வீர தீர சூரன்’ படத்தில் மிரட்டியிருந்த சுராஜ் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஜெயிலர் 2 மிரட்டுமா?
எப்போதாவது நாக்கில் வலி/ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறதா? அப்படி இருந்தால் அது நாக்கு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதனை கண்டறிய இன்னும் சில அறிகுறிகள் இருக்கின்றன. ▶நாக்கில் 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள் ▶சிவப்பு/வெள்ளை புள்ளிகள் தோன்றுவது ▶விழுங்குவதில்/பேசுவதில் சிரமம் ▶நாக்கில் உணர்ச்சி இல்லாமல் போவது இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
இந்தியர்களை ரஷ்ய நிறுவனங்கள் அதிகளவில் பணியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுவதால், திறமையான இந்தியர்கள் பணியமர்த்தப்படுவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் குமார் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், இந்தியர்களின் பார்வையும் ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது.
‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’, TN அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டடது. இந்நிலையில், DMK-வின் குடும்ப & கட்சி உறவுகளுக்கு நெருக்கமானவர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நிலமாகவே வகைப்பாட்டிலேயே இருக்கும்வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இது விஞ்ஞான முறையிலான ஊழலுக்கு வித்திடும் வகையில் உள்ளதாகவும் அவர் சாடினார்.
✦மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை போக்க உதவுகிறது.
➥தரையில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து, கால்களை நேராக முன்னோக்கி நீட்டி அமரவும்.
➥முழங்கால்களை வளைத்து, பாதங்களை சேர்த்து, உள்ளங்கால்கள் இரண்டும் ஒட்டியிருக்கும் படி பிடித்துக் கொள்ளவும்.
➥கைகளால் முழங்கால்களை மெதுவாக தரை நோக்கி அழுத்தவும்.
➥இந்த நிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில், முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும், 7 ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி கூடும் எனவும் கூறப்படுகிறது.
மந்திரம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. SHARE IT.
Sorry, no posts matched your criteria.